காதுகுத்து ஃபங்ஷனுக்கு வந்த மீனாவை கூப்பிட பயந்துகிட்டு தம்பியை விட்டு கூப்பிட சொன்ன செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

Pandian stores 2 today episode november 07 : இன்றைய எபிசோடில் குழலியின் மகள் காதுகுத்துக்கு எல்லோரும் வந்திருக்கின்றனர்.. அங்கு குழலி, அரசி, கதிர், சரவணன், செந்தில் எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.. அப்பொழுது பாண்டியன் இதைப் பார்த்து என்ன இங்க கூட்டமாக இருக்கீங்க போய் வேலையை பாருங்க என்று சொல்கிறார். அடுத்து காதுகுத்து ஃபங்ஷனுக்கு மீனா வருகிறார்.

ஆனால் செந்தில் அப்பா கூட இருப்பதால் மீனாவை போய் அழைத்து வர பயப்பட்டுகிட்டு கதிரை போய் அழைச்சிட்டு வா என்று சொல்கிறார்.. பிறகு கதிர்  மீனாவிடம் நான்தான் செந்திலோடா தம்பி வாங்க என்று கூப்பிடுகிறார். கதிர் மீனாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபப்பட்டு பாண்டியன் என்ன இதெல்லாம் என்று கேட்க அரசி கதிரோட ஃப்ரெண்டா இருப்பாங்க என்று சொல்ல பாண்டியன் கூட படிக்கிற பொண்ணெல்லாம் நம்ம வீட்டு பன்ஷனுக்கு அழைச்சிட்டு வரணுமா என்று கோபப்படுகிறார்..

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர்.! சூனியக்காரியினால் அழுகாசிக்கு உயர்ந்த மார்க்கெட்..

பிறகு பாப்பாவுக்கு காது குத்த மூத்த பையன் சரவணன் உட்கார சொல்லுங்க என்று சொல்ல உடனே செந்தில் நானும் தான் தாய் மாமா என் மடியில தான் உட்கார வைத்து காது குத்தனும் என்று சொல்கிறார் பிறகு கதிரும் நான் தான் சின்னதாய் மாமா என் மடியில தான் உட்கார வச்சு காது குத்தணும் என மூன்று பேரும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

அப்பொழுது பாண்டியன் அங்கு வந்து மூத்தவன் சரவணன் தான் அவன் மடியில தான் உக்கார வச்சு காது குத்தணும் நீ போய் உட்காருடா, மத்த ரெண்டு பேரும் பக்கத்துல போய் நில்லுங்க என்று சொல்ல பிறகு சரவணன் மடியில் குழந்தையை உட்கார வைத்து காது குத்துகின்றனர் அப்பொழுது குழந்தை அழுவதால் மூன்று தாய் மாமன்களும் சேர்ந்து கத்துக்கின்றனர்.. அதனால் பழனி சரவணன், செந்தில், கதிர் மூன்று பேர் வாயிலும் வாழைப்பழத்தை வைத்துள்ளார். அடுத்து முத்துவேல் பிறந்தநாள் பங்க்ஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ரோகினியை தேடி வந்த வசீகரன்.. காசுக்காக ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்கும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அங்கு நிறைய பேர் வந்து போய் கொண்டிருக்கின்றனர்.. அடுத்து கோவிலில் காது குத்து முடிந்து விட்டது பாண்டியன் சுத்தி பார்க்கிறார் அங்கு மாப்பிள்ளை வீட்டு சொந்தக்காரங்க மட்டும் தான் இருக்காங்க பாண்டியன் வீட்டு சைடுல இருந்து யாரும் வரவில்லை.. பிறகு மீனா செந்தில் இடம் என்ன நீ வந்து கூப்பிடாம கதிர விட்டு கூப்பிட சொல்ற அது எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா என்று கேட்க அப்பா இருந்தார் அதான் பயமா இருந்தது என செந்தில் சொல்கிறார் பிறகு கதிரும் அங்கு வந்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது பாண்டியன் மீனா கதிரை மட்டும் பார்த்துவிட்டு என்ன இது பொம்பள புள்ள கூட பேசிட்டு இருக்கான் போய் என்னன்னு கேளு எனக் கோமதி இடம் சொல்லி அனுப்புகிறார்.. கோமதி வந்து மீனாவிடம் நீ எந்த காலேஜ்ல படிக்கிற என்று கேட்க நான் படிச்சு முடிச்சிட்டேன் என்று மீனா சொல்ல அப்படின்னா கதிர விட மூத்தவளா நீ என்று கேட்க ஆமாம் என மீனா சொல்கிறார்.. அடுத்து பாண்டியன் பந்தி பரிமாறும் இடத்திற்கு போய் பார்த்தால் அங்கு கம்மி பேர் தான் இருந்தனர். உடனே கோமதியிடம் 500 பேருக்கு சமைச்சோம் 100 பேரு கூட வந்து சாப்பிடலையே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அதற்கு கோமதி வருவாங்க இருங்க என்று சொல்ல இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.