பாண்டியனுக்கு தெரியாமல் நடு இரவில் கோமதிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

Pandian stores 2 today episode novmber 14 : இன்றைய எபிசோடில் குழலி வீட்டுக்கு கிளம்புகிறார் அப்பொழுது சரவணன் கதிர் எல்லோரும் பாப்பாவ இங்கயே விட்டுட்டு போங்க பாப்பா இல்லன்னா வீடு ரொம்ப அமைதியா இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.. பிறகு குழலியும் அவங்க வீட்டுக்காரரும் கிளம்பும் பொழுது செந்தில் என்ன அக்கா..

வரும் போது சின்ன பைய எடுத்துட்டு வந்த இப்ப இவ்ளோ பெரிய பை தூக்கிட்டு போற என்று கிண்டல் பண்ணுகின்றனர்.. பிறகு கோமதியிடம் அம்மா நீ பீரோவில் ஒரு புடவை வச்சிருந்தல அந்த புடவை, அப்புறம் கிச்சன்ல புதுசா ஒரு பாத்திரம் பார்த்தேன் இதெல்லாம் குடும்மா என்று கேட்க..

காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும் கிடைகாமலையா போகும்.. “ஜிகர்தண்டா 2” 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா .?

கோமதியும் குழலிக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.. பிறகு சரவணன் அப்பா என்னுடைய சம்பள பணம் என்று பாண்டியனிடம் மொத்த பணத்தையும் கொடுக்க உன்னோட செலவுக்கு நீ பணம்  எடுத்துக்களையாடா என்னடா நீ இப்படி இருக்க, புள்ள நா இந்த மாதிரி இருக்கணும் நீயும் தான் இருக்கியே என்று கதிரை மட்டம் தட்டுகிறார்.

அடுத்த நாள் கோமதி உடைய பிறந்த நாள் அதனால் கதிரும் பழனியும் சேர்ந்து வீட்டிற்கு கேக் வாங்கிட்டு வந்து டெக்கரேஷன் பண்ணி விட்டு சரவனையும் செந்திலையும் முதலில் எழுப்பி விடுகின்றனர் பிறகு கதிர் அம்மாவையும் அரசியையும் எழுப்பி அழைச்சிட்டு வருகிறார்.. எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கோமதியை கேக் வெட்ட சொல்கின்றனர்.

சித்ராதேவி, கௌதம் எல்லாம் ஓரம் போங்க.. மகாவை ஒழித்து கட்ட இறங்கும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

பின்பு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய பிறகு கதிர் ஒரு நிமிஷம் இருங்க என்று வெளியே போய் பட்டாசை கொளுத்தி விடுகிறார்.. இந்த சத்தம் கேட்டு பாண்டியன் எழுந்து கதவை தட்டுகிறார் கதவு வெளியில் தாப்பாள் போட்டு இருக்கின்றன.. பிறகு கோமதி கதவை திறந்து விடுவதும் என்ன வெளியே சத்தம் ஏதோ பட்டாசு வெடிச்ச மாதிரி இருக்கு என்று கேட்க அது ஏதாவது ட்ரான்ஸ்பார்மர் வெடித்திருக்கும் என கோமதி சொல்கிறார்.

அதற்கு டிரான்ஸ்பார்மர் வெடிச்சிருந்தா கரண்ட் கட் ஆகி இருக்கணுமே என்ன சத்தம் என்று திரும்பியும் கேட்க என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் கோமதியும், பழனியும் முழித்துக் கொண்டு நிற்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.