எதிர்வீட்டு பெண்ணுடன் சவகாசம் வைத்துக் கொண்டதால் பாண்டியனிடம் தர்ம அடி வாங்கிய கதிர் -பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோட்..

Pandian stores 2 today episode november 13 : இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டில் கதிர், அரசி எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.. அப்பொழுது முத்துவேலும் சக்திவேலும் வீட்டு வாசலில் வந்து கோமதி இங்க வெளியே வா என்று சத்தம் போடுகிறார் உடனே பாண்டியன் எல்லோரும் வெளியே வந்து என்ன இங்க சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க என்று கேட்க உன் பையன் கதிருக்கு என் பொண்ணு கிட்ட என்ன பேச்சு வேண்டியது இருக்கு..

ராஜி கிட்ட வம்பு இழுத்து இருக்கான் என்று சொல்ல என் பையன் அந்த மாதிரி பண்றவன் இல்ல அப்படியே அவன் பேசி இருந்தாலும் காரணத்தோடு தான் இருக்கும் அவன் பேசுனது உண்மை என்றால் நான் அவனை கண்டிக்கிறேன் நீ போய் முதல்ல உன் பொண்ணை கண்டிச்சி வை என்று பாண்டியன் சொல்லி அனுப்பிவிட்டார்.

பட்டாசுகளை வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்.! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

பிறகு உள்ளே வந்ததும் கதிரை பெல்டால் பாண்டியன் அடித்து உனக்கு என்ன அந்த பொண்ணு கூட பேச வேண்டியது இருக்கு நீ ஏன் பேசின உங்க அண்ணனுங்க ரெண்டு பேரும் ஒழுங்கா தான இருக்காங்க நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க என்று தாறுமாறாக அடித்து விட்டார்.. உடனே குழலி நம்ம தம்பி மேல எந்த தப்பும் இருக்காது அவனை ஏன் அடிக்கிறீங்க என்று சொல்வதையும் பாண்டியன் கேட்க வில்லை..

அடுத்து மீனாவும், செந்திலும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.. அப்பொழுது மீனா எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சிடுச்சு அடுத்து எங்க அப்பா கல்யாணத்தை பத்தி தான் பேசுவாங்க நீயும் சீக்கிரம் ஒரு கவர்மெண்ட் வேலைக்கு போயிட்டினா நல்லது என சொல்கிறார் பிறகு மீனா உங்க வீட்ல நம்ம லவ் மேட்டர பத்தி எப்ப சொல்ல போற என்று கேட்க.. பொறுமையா இரு எங்க அண்ணனுக்கே இன்னும் கல்யாணம் ஆகல அதுக்குள்ள எப்படி நான் வீட்ல பேசுவேன்..

கார்த்தியின் ஜப்பான் படம் மட்டுமல்ல ஏராளமான கோலிவுட் நடிகர்களின் 25வது படம் தோல்விதான்.. இந்த லிஸ்டில் இருந்து தப்பித்த அஜித், தனுஷ், சூர்யா..

உனக்கு கல்யாண பேச்சு பேசினா அதுக்கப்புறம் நான் வீட்ல சொல்றேன் என்று சொல்லுகிறார்.. அடுத்து கதிரிடம் வந்து அவங்க அம்மா கோமதி அப்பா உன்னை இப்படி அடிச்சுட்டாரு வலிக்குதாடா என்று கேட்கிறார் அதற்கு பழனி ஏன் அக்கா நீ மாமாவா ஒண்ணுமே கேக்க மாட்டியா அவர் இந்த அடி கதிர போட்டு அடிச்சி இருக்காரு என்று சொல்வதற்கு நான் என்னடா பண்ணுவேன் என கோமதி சொல்கிறார்.

பிறகு ராஜி வீட்டு வாசலில் வந்து நிற்கும்பொழுது அடி பலமா விழுந்தது போல எங்க வீடு வரையும் சத்தம் கேட்டது என கதிரை பார்த்து கிண்டல் செய்கிறார்.  அதுக்கு பழனி இப்படி மாட்டி விட்டுட்டு வேடிக்கை பாக்குற என்று ராஜியை சொல்லிவிட்டு கதிரிடம் நீ ஏன் ராஜி கிட்ட பேசின என்று கேட்க..

அவள் ஒரு பையன் கூட ரெண்டு மூணு தடவ பேசிட்டு இருந்தத நான் பார்த்திருக்கேன் ரெண்டு பேரும் லவ் பண்றாங்க போல.. இதெல்லாம் தேவையான்னு தான் கண்டிச்சேன் ஆனா அவ என்ன மாட்டி விட்டுட்டா என்று சொல்கிறார் இதைக் கேட்ட பழனி அவங்க அப்பாவை பத்தி தெரிஞ்சு இந்த ராஜி இப்படி பண்ணுது என்று சொல்கிறார் இதோட எபிசோடு முடிந்துள்ளது.