கடைக்கு வந்து கதிரை மிரட்டி விட்டு போகும் குமரவேல்.. கொந்தளித்த முத்துவேல், சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

Pandian stores 2 today episode november 11 : இன்றைய எபிசோடில் முத்துவேலும், சக்திவேலும் நம்ம தங்கச்சி கோமதிய எப்படி எல்லாம் வளத்தோம் நம்ப பொண்ணு மாதிரி தானே வளர்த்தோம் ஆனா நமக்கு துரோகம் பண்ணிட்டு அந்த பாண்டியன் கூட ஓடிட்டாளே என்று கோமதியை நினைத்து வருத்தப்படுகின்றனர்.. அடுத்து ராஜி கோவில் பக்கத்தில் உள்ள குளத்தில் ஒரு பையனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த பக்கமா குமார் வருவதை பார்த்து ராஜி எங்க அண்ணன் வராங்க என்று சொல்ல அந்த பையன் ஓடிவிட்டார் அதே நேரத்திற்கு அந்த இடத்திற்கு கதிரும் வந்து ராஜியை பார்த்து என்ன நீ ஒரு பையன் கூட பேசிட்டு இருக்க எங்கம்மா லவ் பண்ணதுக்கே உங்க வீட்ல இன்னும் சண்டை நடந்துட்டு இருக்கு, நீ லவ் பண்ற விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா உன் சோலி முடிந்தது என்று ராஜியை மிரட்டி விட்டு போகிறார்.

என்னை ஏமாத்திட்டு நீ சந்தோஷமா தல தீபாவளி கொண்டாடுறியா. ஸ்ருதி கதையை முடிக்க பார்த்த விச்சு – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இதை பார்த்த குமாரவேல் என் தங்கச்சி கிட்ட உனக்கு என்ன பேச்சு என்று கதிரிடம் கேட்க நான் உன் தங்கச்சி கிட்ட என்ன சொன்னான்னு நீ அவகிட்டயே போய் கேளு என சொல்கிறார். பிறகு குமாரவேல் வந்து ராஜியிடம் ஏன் கதிர் வந்துட்டு போறான் என்று கேட்பதற்கு அவன் என்கிட்ட பிரச்சனை பண்றான் எங்க பார்த்தாலும் என்கிட்ட வம்பு இழுத்துட்டே இருக்கான் என்று சொல்கிறார்.

இதைக் கேட்டு கோபப்பட்டு குமாரவேல் பிறகு பாண்டியன் ஸ்டோர் கடைக்கு நேராக சென்று எங்க அந்த கதிர், அவ மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்பா, என் தங்கச்சி ராஜி கிட்ட பிரச்சனை பண்றான் ஒழுங்கா இருக்க சொல்லுவேன் என்ன சொல்லிவிட்டு போகிறார்.. அடுத்து வடிவுக்கு சிவகாமி அத்தாச்சி போன் பண்ணி குமாரவேல பாண்டியன் ஸ்டோர் கடையில் பார்த்தேன் என்று சொல்ல பிறகு வீட்டில் உள்ள எல்லோரும் குமாரவேல் அந்த கடை பக்கம் ஏன் போனால் என குழம்பி இருக்கின்றனர்.

என் வாழ்க்கையை நாசமாக்கின மாதிரி ஜெனி வாழ்க்கையை நாசமாக்க பாக்கறீங்களா,. ஈஸ்வரியிடம் மல்லுக்கட்டும் பாக்யா.! பண்றதெல்லாம் பண்ணிட்டு கால்ல விழுந்தா சரியாயிடுமா செழியா.

ராஜியும் குமாரவேலும் வீட்டிற்கு வருகின்றனர்.. அப்பொழுது எல்லோரும் குமாரவேலிடம் உனக்கு பாண்டியன் ஸ்டோர் கடையில என்ன வேலை என்று கேட்க.. நம்ம ராஜி கிட்ட அந்த கதிர் வம்பு இழுத்தான் அதான் அங்க போய் அவனை வான் பண்ணிட்டு வந்தேன் என்று சொல்ல உடனே முத்துவேலும், சக்திவேலும் அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டு பொண்ணு கிட்ட வம்பு இழுப்பான் என்று கோபமாக பாண்டியன் ஸ்டோர் வீட்டிற்கு கிளம்புகின்றனர் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.