என் வாழ்க்கையை நாசமாக்கின மாதிரி ஜெனி வாழ்க்கையை நாசமாக்க பாக்கறீங்களா,. ஈஸ்வரியிடம் மல்லுக்கட்டும் பாக்யா.! பண்றதெல்லாம் பண்ணிட்டு கால்ல விழுந்தா சரியாயிடுமா செழியா.

baakiyalakshmi today episode : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் செழியன் ஜெனி வீட்டிற்கு போனார் ஆனால் ஜெனியின் அம்மா செழியனை திட்டி அனுப்பி விடுகிறார்கள் இந்த நிலையில் பாக்கியா ஜெனியின்  அம்மாவிற்கு கால் பண்ணுகிறார் ஜெனியின் அம்மா போனை அட்டென்ட் பண்ண தயங்க பிறகு போனை அட்டென்ட் பண்ணி பேசுகிறார். அப்பொழுது பாக்கியா பேசுவதற்கு முன்பே உங்கள நான் எவ்வளவு நம்பினேன் ஆனால் நீங்களும் உங்க பையன ப்ரொடெக்ட் பண்ண மறச்சிட்டிங்க விஷயத்தை என பேசுகிறார்.

ஜெனியின் அம்மா என் பொண்ணு எப்படி வாழ்ந்தால் தெரியுமா.? அவள எவ்ளோ பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு இருந்தோம் ஆனா உங்க பையன விரும்புனா என்ற காரணத்திற்காக நீங்க வந்து பேசினீங்க அதனால தான் நாங்க கொடுத்தோம் ஆனா நீங்களே இப்படி பண்ணிட்டீங்களே அவ மனசு உடைஞ்சு போய் எவ்வளவு கஷ்டப்படுற தெரியுமா? குழந்தையை பார்த்துக்க முடியாம அவளும் எவ்வளவு கஷ்டப்பட்டுடா தெரியுமா.? என பேசுகிறார்.

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் அஜித் மடியிலேயே கை வைக்க பார்த்த ரஜினி.! பரபரப்பை கிளப்பிய இயக்குனர்..

இனிமே எனக்கு போனே பண்ணாதீங்க என ஜெனி அம்மா கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் என்ன பண்ணனும் எனக்கு தெரியும் இதுக்கு மேல போன் பண்ணாதீங்க என்ன திட்டவட்டமாக பேசி விடுகிறார். அடுத்த காட்சியில் பாக்கியா இடிந்து போய் உட்கார்ந்திருக்க ராதிகா பாக்யாவை பார்த்து பரிதாபப்பட்டு டீ போட்டு பக்கத்தில் வைத்து விட்டு அருகிலேயே அமருகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் பாக்கிய சமையல் கட்டில் இருக்கும் பொழுது வந்து மன்னிப்பு கேட்கிறார் அதற்கு பாக்யா உங்க அப்பாவுக்கும் உனக்கும் பெருசா டிஃபரண்டே கிடையாது யாரை மன்னிச்சாலும் மன்னிப்பேன் உன்னை மட்டும் என் வாழ்க்கையில் மன்னிக்கவே மாட்டேன் என திட்டுகிறார்.

உடனே செழியன்  பாக்கியா காலை பிடித்து கதறி அழுகிறார் ஆனால் பாக்கிய புடிச்சு தள்ளி என் மூஞ்சில முழிக்காத இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என திட்டுகிறார். அடுத்த காட்சியில் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது நான் போய் ஜெனியை கூட்டிட்டு வரப் போறேன் என ஈஸ்வரி கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரி வா பாக்கியா நீயும் தான் வரணும் என பேச என்னால் முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார்.

என்னையே உன் கிட்ட கொடுத்தனே ஆனா பட வாய்ப்பு மட்டும் கொடுக்கலையே… புலம்பும் டிவி நடிகை.!

அவ எவ்வளவு உடைஞ்சு போய் இருப்பா இந்த நேரத்துல அவளை எப்படி கூப்பிட முடியும் அவ மனசுல இருக்குற காயம் கொஞ்சமாவது ஆற வேண்டாமா என பேசுகிறார்கள் அதேபோல் ராமமூர்த்தியும் நீ என்ன பைத்தியமா இப்ப எப்படி இந்த நிலைமையில கூப்பிட முடியும் என கேட்க அதுக்காக நாம அப்டியே விட்டுட முடியுமா நாம பேசி தான் ஆகணும் என பேசுகிறார்.

உடனே பாக்யா எதுக்கு அத்த, என்ன இந்த வீட்ல முடங்கி வச்சிருக்க மாதிரி ஜெனியையும் மாத்தலாம்னு பாக்குறீங்களா அதுக்கு ஒரு காலத்துக்கும் நான் சம்மதிக்க மாட்டேன் என பாக்கியா ஈஸ்வரியை திட்டி தீர்க்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.