குடும்பத்தை பிரிக்க பாக்குறியே என பெண் வீட்டாரிடம் சண்டை போடும் கோமதி!! சரவணனுக்கு ஆறுதலாக ராஜி..

pandian stores 2 promo today episode march 26 : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கேபையில்  சரவணனுக்காக பொண்ணு பார்க்க மொத்த குடும்பத்தினரும் சென்று இருந்தனர்.அந்தப் பெண் சரவணன் மொத்த குடும்பமும் வந்திருப்பது தெரிந்ததும் ஒன்னும் சொல்லாமல் அங்கிருந்து போய் விடுகிறார். வீட்டிற்கு வந்த பாண்டியன் குடும்பத்தினர் அந்த பொண்ணு ஒண்ணுமே சொல்லாம போயிடுச்சு என போன் பண்ணுகின்றனர்.

ஆனால் அந்த பொண்ணு மீனாவின் நம்பரை பிளாக் பண்ணிவிட்டது அதற்கு மீனா என்ன என் நம்பர் அந்த பொண்ணு ப்ளாக் பண்ணிடுச்சி எதுக்காக என் நம்பர பிளாக் பண்ணனும் என புலம்பி கொண்டு இருக்க அப்போது செந்தில் அவருடைய போனில் இருந்து அந்த பொண்ணுக்கு போன் பண்ணுகிறாள் போன் கால் அட்டென்ட் பண்ணி யார் எனக் கேட்க மீனா உங்க கூட பேச வேணாம்னு தான நான் உங்க நம்பர பிளாக் பண்ணேன் அப்புறம் ஏன் பண்றீங்க என் சொல்லிவிட்டு கட் பண்ணி விடுகிறாள். உடனே மீனா கடுப்பானதால் செந்தில் இந்த தடவை நம்ப அவங்க நம்பர பிளாக் பண்ணிடுவோம் என்று சொல்லி அந்த அகிலா பொண்ணு நம்பரை பிளாக் பண்ணுகின்றனர்.

கில்லி படத்தை தவறவிட்டு இன்று வரை வருத்தப்படும் பிரபல நடிகர்… அட நம்ம லிஸ்டிலேயே இது இல்லையே..

அதனை தொடர்ந்து நைட் மாடியில் அனைவரும் படுத்து இருக்கின்றனர்.அப்போது சரவணன் நீங்க ஏண்டா இங்க வந்தீங்க, இப்ப மீனாவும் ராஜியும் வந்து என்கிட்ட சண்டை போட போறாங்க போய் கீழ தூங்குங்க டா என சொல்கிறார். உடனே கதிரும் செந்திலும் நீங்க சொன்னீங்கன்னா எவ்வளவு நாளைக்கு வேணும்னாலும் இங்கேயே தூங்குவோம் என சொல்கின்றனர். அதற்கு சரவணன் நான் கஷ்டப்படு வேன்னு தான நீங்க சமாதானப்படுத்த வந்திருக்கீங்க  அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது  என சொல்கிறார். நீங்க இப்படி எல்லாம் பண்றது தான் எனக்கு கஷ்டமா இருக்கு என சொல்கிறார்.

அதோட அந்த பொண்ணு கிட்ட எனக்கு பேச தெரியலடா கை, கால் எல்லாம் நடுங்குது என நடந்த அனைத்தையும் சொல்கிறார். அப்போது அங்கு வந்த ராஜி அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.ராஜியை பார்த்த சரவணன் அங்க பாருடா  கதிர் உன் பொண்டாட்டி உன்னை தேடி வந்துட்டா நான் அப்பவே சொன்னேன்ல போடான்னு என கூறுகிறார்..

அர்ஜுன் என்ன இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்ட.. தமிழ் நீ கில்லாடி ஆள் தான்.. போலீஸ் கிட்ட சிக்காம தப்பிச்சிட்டியே..

அதற்கு ராஜி இல்ல மாமா நான் உங்கள பாக்க தான் வந்தேன். நீங்க எனக்கு கொடுத்த போன்ல நிறைய கான்டக்ட் நம்பர் இருக்கு அதெல்லாம் டெலிட் பண்ணலாமா என கேட்கிறார் அது ஓன் போன் மா நீ என்ன வேணா பண்ணிக்கலாம் என சரவணன் சொல்ல சரிங்க மாமா நீங்க பேசுனத  நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் நான் ஒன்னு சொல்லலாமா என கேட்டுவிட்டு எல்லா பொண்ணுங்களும் அப்படி இருக்கணும்னு நினைக்க மாட்டாங்க நிறைய பொண்ணுங்க நம்மள நல்லா பாத்துக்கணும் பொறுமையானவனா இருக்கணும் பாசமானவனா இருக்கணும்னு நினைப்பாங்க அதனால உங்களுக்கு ஏத்த பொண்ணு கண்டிப்பா இருக்காங்க எனக் கூறுகிறாள். உடனே அதைக் கேட்டு அனைவரும் ராஜி சொல்றது சரி தான் என சொல்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் மீனா கோமதியிடம்  அத்தை இன்னும் ரெண்டு பொண்ணுங்க நம்பர் இருக்கு அதுல ஒரு பொண்ணு அவங்க அம்மா நம்பர் குடுத்து இருக்காங்க இன்னொருத்தவங்க  அப்பா நம்பர் குடுத்து இருக்காங்க அம்மா நம்பர் கொடுத்தவங்க கிட்ட நீங்க பேசுங்க அப்பா நம்பர் கொடுத்தவங்க கிட்ட மாமா பேசட்டும் என சொல்கிறார்.

மாலையில் ஆரம்பித்த சண்டை.. விஜயாவையும் சுதாவையும் மிரட்டிய சுருதி.. ஃபர்ஸ்ட் பால் 6 ஆயிடுச்சே…

உடனே கோமதியும் பேசுகிறாள், அப்படி பேசும்போதே உங்க குடும்பம் பெரிய குடும்பமா இருக்கே வேணும்னா உங்க பையன தனி குடுத்தனம்  அனுப்புறதா இருந்தா சொல்லுங்க பார்க்கலாம் என சொல்கிறார். இதைக் கேட்ட கோமதி கடுப்பாகி என் குடும்பத்தை பிரிக்க பாக்குறியாடி என போனிலேயே சண்டை போடுகிறார். மேலும் மீனா போனை பிடுங்கி கட் பண்ணி விடுகிறார். அதனை தொடர்ந்து மீனா அனைவருக்கும் டீ கொடுக்கப் போகிறார். அப்போது பாண்டியனிடம் இன்னும் ஒரே ஒரு நம்பர் இருக்கு அந்தப் பொண்ணோட அப்பா நம்பர் நீங்க அவங்க கிட்ட பேசுங்க என சொல்கிறார், அவரும் பேசுகிறார் ஆனால் அந்தப் பெண் வீட்டுக்காரர் எங்க குடும்பத்துல எல்லாருமே ஃபாரின்ல தான் இருக்காங்க உங்க பையனை எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி குடுங்க ஆனா நாங்க பாரின்க்கு கூட்டிட்டு போயிடுவோம் என சொல்கிறார். உடனே பாண்டியன் உள்ளூரில் வேலை பார்க்க தெரியாதவன் தான் வெளிநாட்டுக்கு போவான் எங்களுக்கு அந்த அவசியம் இல்லை என கூறி போனை கட் பண்ணி விடுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.