கதிரை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் ராஜி!! ஆபீஸிலேயே சண்டை போட்ட மீனா… மீனாவை தேடும் செந்தில்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்று எபிசோடில் செந்தில் ரோட்டில் சண்டை போட்டு கொண்டிருக்கும் ராஜி கதிரை பார்த்து பஸ் ஸ்டாண்ட் அங்க இருக்கு இங்க என்ன நின்னுட்டு இருக்கீங்க என கேட்கிறார். ஃபிரண்ட்ஸ் எங்களை கிண்டல் பண்றாங்க அதான் நாங்க இங்க வந்துட்டோம் என  சொல்கிறார்.

 அண்ணா எனக்கு ஒரு உதவி செய் நீ போற வழியில் தான இவளோட காலேஜ் இருக்கு அங்க இவளை விட்டுட்டு போ என சொல்கிறார். அதற்கு செந்தில், இந்தா பைக் எடுத்துட்டு நீங்க ரெண்டு பேரும் போங்க என சொல்கிறார். அதற்கு கதிர் உங்களுக்கு டெலிவரி பன்ற வேலை இருக்கும் அதனால நீங்களே எடுத்துட்டு போங்க நான் பஸ்ல போறன் இவளை மட்டும் கொண்டு விட்டுடுங்க என சொல்லி ராஜியை அனுப்பி விடுகிறார்.

செந்தில் உடனே ராஜியிடம் உன் மேல அவனுக்கு எவ்வளவு அக்கறை பாரு. எல்லாம் ஒன்ன ஓட்டு வாங்க அப்படிங்கறதால உன்னை மட்டும் பைக்ல அனுப்பி வச்சுட்டு அவன் பஸ்ல போறான். வெளிய பார்க்க தான் கரடு முரடா இருப்பான் ஆனா எல்லாத்து மேலயும் ரொம்ப பாசமா இருப்பான் என கூறுகிறார். ஆமாம் அவன பத்தி போய் ஓங்கிட்ட சொல்றேன் பாரு, நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க உனக்கு தான் அவனை நல்லா தெரியுமே என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில்  அனைவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.  அப்போது செந்தில் வந்து எங்க இன்னும் மீனா வரலையா என கேட்கிறார். எப்பவும் இந்த நேரத்துக்கு வந்துருவாங்க வந்து பஸ் ஸ்டாண்ட்ல எனக்காக நிப்பாங்க ஆனால் இன்னைக்கு இல்ல  நானே வந்துட்டேன் அவங்க வரல என ராஜி கூறுகிறார்.

விஜயா மேடம் இதுக்கு பேரு தான் புயலுக்கு முன் அமைதியா.. ரோகிணி இனி உனக்கு மீனாவோட நிலைமை தான்..

உடனே செந்தில் ஏற்கனவே நடந்த சண்டையை யோசித்துப் கொண்டே  உட்கார்ந்திருக்கிறார். அப்போது ராஜி டீ போட்டு வந்து அனைவருக்கும் கொடுக்கிறார். கதிருக்கு மட்டும் கொடுக்கவில்லை. பழனி ராஜியை பார்த்து உனக்கு டீ கூட போட தெரியுமா அங்க வந்தப்பல்லாம் எனக்கு ஒரு நாள் கூட டீ போட்டு கொடுத்ததே இல்லையே என கேட்கிறார்.

அதற்கு ராஜி இல்ல அங்க என்ன சித்தியும் அம்மாவும் எந்த வேலையும் செய்ய விட மாட்டாங்க என சொல்கிறாள். உடனே கோமதி அப்ப நான் இங்க உன்னை வேலை செய்ய சொல்லி கொடுமை படுத்துறனா என கேட்கிறார். இல்லத்த நானே தான் போட்டேன்  அங்க கண்டிப்பா நீ எப்படி இருக்கன்னு உன்ன பத்தி விசாரிப்பாங்க அப்ப பழனி எல்லாத்தையும் சொல்லிடு என கோமதி சொல்கிறார்.

மேலும் கோமதி நாளைக்கு சரவணனோட பிறந்தநாள் கோயிலுக்கு போகணும் என சொல்கிறார். உடனே ராஜி கேக் வெட்டி கொண்டாடுவீங்கல்ல எனக் கேட்க அதற்கு அரசி சின்னதா ஒரு கேக் வெட்டி பாயாசம் செஞ்சு சாப்பிடுவோம் அவ்வளவுதான் அண்ணி என சொல்கிறார். உடனே கதிரும் அரசியும் சேர்ந்து பழனியின் பையில் இருக்கும் 500 ரூபாயை ஆட்டையை போடுகின்றனர். அதை பார்த்து ராஜி சிரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது செந்தில் மீனாவை தேடி ஆஃபீஸ்க்கு செல்கிறார்.

நடு ரோட்டிலேயே சண்டை போட்டுக் கொள்ளும் கதிர், ராஜி!! ராஜிக்கு என்ன ஆச்சு என பயப்படும் அம்மா.. பாண்டியன் ஸ்டோர்..

மீனாவோ செந்தில் அங்க வந்தது தெரியாமல் பொண்ணு பாக்க வரசொல்லி எங்க குடும்பத்தை அசிங்கப்படித்திட்டிங்க என சொல்லி அந்த அக்கா கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காங்க,இனிமே என்கிட்ட பேசாதீங்க அக்கா ஆபீஸ் விஷயமா மட்டும் பேசுங்க பர்சனலா எதுவும் பேச வேணாம் என்ன சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே போகிறாள்.

அப்போது செந்திலை பார்க்கிறார். செந்தில் மீனா விடம் சாரி கேட்கிறார். உடனே இருவரும் சேர்ந்து கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கின்றனர். செந்திலைப் பார்த்து காலைல நான் உன்கிட்ட சண்டை போட்டுட்டேன் வரமாட்டேன்னு சொன்னேன்ல்ல  அதனால பயந்து என்னை தேடி வந்துட்டியா என கேட்கிறார். அதோடு மட்டுமில்லாமல்  அப்படி எல்லாம் நான் உன்ன நிம்மதியா இருக்கு விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன் எனக் கூறுகிறாள் . அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.