நடு ரோட்டிலேயே சண்டை போட்டுக் கொள்ளும் கதிர், ராஜி!! ராஜிக்கு என்ன ஆச்சு என பயப்படும் அம்மா.. பாண்டியன் ஸ்டோர்..

பாண்டியன் ஸ்டோர்2 இன்றைய எபிசோடடில் வீட்டிற்கு வெளியே போய் அனைவரும் பாண்டியனை செருப்பு போட சொல்லி கெஞ்சி கேட்கின்றனர்.அப்படி கேட்டுக் கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் இருந்து கோமதியின் அம்மா என்ன நடக்குது என புரியாமல் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அதோடு இல்லாமல் பழனியிடம்  என்ன என கேட்கின்றனர். அதற்கு பழனி சைகை மூலம் அப்புறம் வரேன்னு கூறுகிறார்

எவ்வளவு சொல்லியும் பாண்டியன் கேட்காமல் செருப்பு போடாமல் வண்டி எடுத்து சென்று விடுகிறார். உடனே சரவணன் கடைக்கு போய் அப்பாவ பார்த்து இன்னொரு தடவை சொல்லிட்டு வேலைக்கு போறேன் என கோமதியிடம்  சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதனை தொடர்ந்து ராஜியின் அம்மா, சித்தி என அனைவரும் வெளியே வந்து என்ன சத்தம் கேட்குது என பார்க்கின்றனர். ராஜியின் அம்மாவோ ராஜிக்கு ஏதோ பிரச்சனையோ என பயப்படுகிறார். பழனியை கூப்பிட்டு என்ன பிரச்சனை என கேட்கிறார்

பழனி ராஜி நல்லா தான் இருக்கா அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. மாமா தான் சரவணனுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் செருப்பு போட மாட்டேன் என சபதம் எடுத்திருக்காங்க என சொல்கிறார். செருப்பு போடாம இருந்தா  கல்யாணம் ஆயிடுமா? என கேட்கிறார் ராஜ்ஜியின் சித்தி. அப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா என இறு வரும் மாடியில் இருந்து கீழே வந்து அந்த வீட்ட பத்தி இங்க யாரும் எதுவும் பேசக்கூடாது அப்படி பேசுறவங்க வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என சொல்கிறார். அதோடு பழனியையும் நீ என்ன புறா வா இங்க நடக்குறத அங்கேயும் அங்க நடக்குறத இங்கேயும் சொல்லிட்டு இருக்க என சொல்லி திட்டுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கோமதி அவருக்கு சுகர் வேரையா இருக்கு செருப்பு போடாம இருந்தா ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு என சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது மீனா செருப்பு போடலைன்னா கல்யாணம் ஆயிடுமா எனக் கூற அதற்கு கோமதி, அது என்ன அவர் செருப்பு போடலைன்னு சொல்றாரு உடனே நீ சிரிக்கிற என கேட்கிறார்.

உடனே செந்திலும் மீனாவை ரூமுக்கு அழைத்து போய் திட்டுகிறார். நீ பண்றது எல்லாம் நான் பாத்துட்டு தான் இருக்கேன் ஏன் இப்படி நடந்துக்குற எங்க அப்பா பண்றத பாத்தா உனக்கு சிரிப்பா இருக்கா என திட்டுகிறார். அதற்கு மீனா உனக்கு என் மேல பாசமே இல்ல, நீ எப்ப பாரு என்ன திட்டிட்டே இருக்க நான் எங்கயாவது போயிடுறேன் என கூறுகிறாள். அதற்கு செந்தில் நீ எங்க வேணும்னாலும் போய் தொல அத பத்தி எனக்கு பிரச்சனை இல்ல என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து கதிர் காலேஜுக்கு போக பஸ் ஸ்டாண்டுக்கு போகிறார். அங்கு ராஜியின் தோழிகள் இன்னும் ராஜி வரல இன்னைக்கு அவ லீவா என கேட்கின்றனர். அதற்கு கதிரோ அவ வருவா என சொல்கிறார். கதிர் பஸ் ஸ்டாண்டில் போய் அவரது பிரான்ஸுடன் நிற்கிறார். அப்போது அவரது ஃபிரண்ட்ஸ் எங்க கூடதாண்டா இருந்த எப்ப பாத்தாலும் ராஜி கூட சண்டை போட்டுட்டு இருப்ப அப்புறம் எப்புடிடா காதலிச்ச, திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குற உங்க காதல் கதையை சொல்லுடா என கேட்டு வற்புறுத்துகின்றனர்.

கதிர் சொல்லாததும் உடனே ராஜ்ஜியை போய் கேட்கின்றனர். ராஜியும் ஒண்ணும் சொல்லாமல் நிற்கிறாள். உடனே கதிர் ஸ்டேஷனரிக்கு போய் பொருள் வாங்கணும்னு சொன்னில வா போய் வாங்கிட்டு வரலாம் என சொல்லி அங்கிருந்து கூப்பிட்டு போகிறார். அப்படி போகும் போது இருவரும் மாத்தி மாத்தி சண்டை போட்டுக் கொள்கின்றனர். அந்த நேரம் பார்த்து செந்தில் வந்து என்னடா இங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க என கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.