சிவாஜியை பளாரென அறைந்த பத்மினி.. சூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் பார்த்த தரமான வேலை.. யாராலும் மறக்கவே முடியாது

Sivaji : நடிப்பிற்கு பெயர் போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவர் திரை உலகில் போடாத கெட்டப் இல்லை பார்க்காத வெற்றியே கிடையாது இப்படிப்பட்ட சிவாஜிபல நடிகைகளுடன் நடித்து நடித்திருந்தாலும் அவருக்கு ஜோடி என்றால் அது பத்மினி தான் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள்.

குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருவரும் போட்டி போட்டு நடிப்பார்கள் அந்த படம் வெளிவந்து எவர்கிரீன் வெற்றி பெற்றது. சிவாஜியும் – பத்மினியும் தெய்வப்பிறவி, பணம் மரகதம், இரு மலர்கள், திருமால் பெருமை, புனர் ஜென்மம், எதிர்பாராதது, தேனும் பாலும், அமர தீபம், மங்கையர் திலகம் என சொல்லிக்கொண்டே போகலாம்..

நட்புக்காக என்ன வேணாலும் செய்வேன்.. ரஜினி நடித்த “தளபதி” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

இவர்கள் இருவரும் நடித்த படங்களில் ஒன்று “எதிர்பாராதது” இந்த படத்தில் ஒரு காட்சியில் சிவாஜியின் கன்னத்தில் பத்மினி கோபமாக அறைய வேண்டும் ஆனால் என்னால் அப்படி நடிக்க முடியாது என பத்மினி மறுக்க சிவாஜி அவரை கஷ்டப்பட்டு  சம்மதிக்க வைத்தார் இயக்குனர் ஆக்சன் என சொன்னதும் பத்மினி பளார்னு அறைய சிவாஜி கதி கலங்கிவிட்டார்.

மூன்று நாட்கள் அவர் காய்ச்சலில் படுக்கும் அளவிற்கு சென்று விட்டது. இதை தெரிந்து கொண்ட பத்மினி நம்மால் தான் சிவாஜிக்கு இந்த நிலைமை என வருத்தப்பட்டு அவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி ஒரு புதிய காரை பரிசாக கொடுத்தார்.

முடிவுக்கு வந்த லியோ படத்தின் வசூல்.. மொத்தம் இத்தனை கோடியா.?

இந்த செய்தியை திரை உலகில் தீயாய் பரவியது பிறகு எம்ஜிஆர், பத்மினியும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்தனர் அப்பொழுது எம்ஜிஆர் இயக்குனரிடம் இந்த படத்தில் பத்மினி என்னை அறிவது போல் ஒரு காட்சி வையுங்கள் அப்பொழுது தான் எனக்கு கார் கிடைக்கும் என நகைச்சுவையாக சொல்லி உள்ளார்.