ஆணவத்தால் மார்க்கெட்டை இழந்த நயன்தாரா.. 10 கோடி சம்பளம் வாங்கி என்ன பிரயோஜனம்.? ஒரு கோடி கொடுக்க மனமில்லை

Actress Nayanthara: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வெற்றி நாயகியாக ஜொலித்து வந்தார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருந்தாலும் சமீப காலங்களாக இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.

எனவே மார்க்கெட்டை இழந்திருக்கும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் உடன் இருந்தாலும் அதற்கான தகுதி வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த இவருடைய மார்க்கெட் தற்பொழுது மொத்தமாக குறைந்து இருக்கிறது எனவே அதிக சம்பளம் வாங்கும் இவர் ஷேர் கொடுப்பதில்லை என்பதும் உண்மை என கூறப்படுகிறது.

விஜயகாந்த்-ராவுத்தர் நட்பை படமாக்க போவதாக மகன் பேட்டி.! இவர்களுடைய பிரிவு குறித்து உண்மை தகவல்

அதாவது நயன்தாரா ஒரு படத்திற்கு ரூபாய் பத்து கோடி வரையிலும் சம்பளம் பெற்று வருகிறார் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழும் நயன்தாரா ஒரு கோடி கூட தனது சம்பளத்திலிருந்து ஷேர் கொடுப்பது இல்லையாம் எந்த ப்ரோமோஷனுக்கும் நயன்தாரா வருவது கிடையாது.

எனவே தனது ஆணவத்தால் நயன்தாரா மார்க்கெட் இழந்திருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நயன்தாரா பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கும் நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது.

விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த 5 நடிகைகள்.. கேப்டன் சொன்ன உண்மை!

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளியான இறைவன், அன்னபூரணி இரண்டு திரைப்படங்களுமே படும் தோல்வியை சந்தித்துள்ளது எனவே நயன்தாரா தமிழில் சுத்தமாக தனது மார்க்கெட்டை இழந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டிலிருந்து நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உதவியுடன் அதிகம் தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.