மொட்டை ராஜேந்திரன் மொட்டைக்கு பின் இப்படி ஒரு சோக கதையா.! இதையும் தலைவன் சிரிச்சுக்கிட்டே சொல்றாரே..

Actor Mottai Rajendran: தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக வலம் வந்து கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிக முடி இருந்ததாகவும் பிறகு ஒரு விபத்தில் தனது முடிகள் அனைத்தும் கொட்டி தற்பொழுது மொட்டை ராஜேந்திரன் ஆக உள்ளதாக சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். 

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் ஒருவராக நடித்து வந்தார் .அதன் பிறகு 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் 2009ஆம் ஆண்டு நான் கடவுள் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக பட வாய்ப்புகள் குவிந்தது.

கைதி படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது..! ஆத்தாடி இளநடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல.

தற்பொழுது வரையிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்து மிரட்டி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன் விஜய், அஜித், ஆர்யா, விஜய், சேதுபதி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மக்கள் மத்தியில் மொட்டை ராஜேந்திரன் ஆக பிரபலமாக இருக்கும் இவருடைய மொட்டைக்கு பின்னால் பெரிய கதையே உள்ளது. அதாவது சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இவர் நடித்த படங்களில் இவருக்கு நிறைய முடி இருந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

50வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?.

இது குறித்து சமீப பேட்டியில் மொட்டை ராஜேந்திரன் கூறியதாவது, மலையாள படத்தின் படப்பிடிப்பிற்காக சென்ற பொழுது சண்டைக் காட்சியில் எங்கு விழவேண்டும் என்று சொன்னாலும் விழுந்து விடுவேன் அது போன்ற கேரக்டர் நான். எந்த மாதிரி தண்ணி அப்படி எல்லாம் பார்க்க மாட்டேன் ஒரு நடிகரை அடித்து விட்டு தண்ணிக்குள் விழுந்தேன்.

அதன் பிறகு தான் அங்கிருந்த மக்கள் இதில் ஏன் பா விழுந்த அது ஃபேக்டரியிலிருந்து வந்த கழிவு நீர் என்று சொன்னாங்க அங்கு குளிக்க முடியவில்லை வீட்டிற்கு வந்து தான் குளித்தேன் ஆரம்பத்தில் சின்னதா கொட்டுச்சு பிறகு மொத்தமாக கொட்டி தற்பொழுது மொட்டை ராஜேந்திரன் என்ற பெயரை கொடுத்துருக்கு என்று சோகத்தையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.