என்னால முடியல விட்டுடுங்க ப்ளீஸ் இயக்குனரிடம் கெஞ்சிய நடிகை மீனா..! அந்த படம் பெரிய ஹிட்

Meena : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வந்தவர் மீனா. தமிழ் சினிமாவில் ரஜினி, சரத்குமார், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய் என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்த மீனா திடீரென பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார் மீனா தனது குடும்பத்துடன் அழகாக வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய கணவர் வித்தியாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் மீனாவை அதள பாதாளத்துக்கு தள்ளியது. இரண்டு, மூன்று மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா… உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா… தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

அவருடைய நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவரை மீட்டெடுத்தனர் தற்பொழுது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையில் நடிகை மீனா பேட்டி ஒன்றில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பத்தி பேசி உள்ளார். மீனா கூறியது நாட்டாமை திரைப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தி கேட்டார்கள்.

வெறும் 20 நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று கூறினார்கள் நான் கதை கேட்டேன் நாட்டாமை படத்தில் நடிகை குஷ்பூ இருக்கிறார். நடிகை சங்கவி இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் தெரியும்..  இவர்கள் இருவரும் இருக்கும் பொழுது நமக்கு என்ன அங்க வேலை இருக்கப் போகிறது என்று யோசித்தேன் பலரும் கே எஸ் ரவிக்குமாரின் படம்  எதுவும் தாமதமாக செய்ய மாட்டார் அவருடைய வேலை கச்சிதமாக இருக்கும் தேவை இல்லாத இடையூறுகள் எதுவும் இருக்காது என கூறினார்கள்.

என்னை பார்க்க இங்க வராதே.? நீயும், நானும் அப்படியா பழகினோம்.. பிரபல நடிகரை பார்த்து சொன்ன விஜயகாந்த்

அந்த நேரத்தில் நிறைய படத்தில் ஒப்பந்தமாகி இருந்த நினைவில் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை எனவே ரொம்ப டைட்டா இருக்கு வேணாம் விட்ருங்க என கெஞ்சி தான் படத்திலிருந்து வெளியே வந்து விடலாம் என்று பார்த்தேன்.. கடைசி நேரத்தில் மனம் இறங்கி நடித்தேன்.. அதன் பிறகு முத்து திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்தேன். எனக்கு விருப்பமான இயக்குனர்களுக்கு ரவிக்குமார் தான் முதல் இடத்தில் இருக்கிறார் மீனா கூறி உள்ளார்.