பாலா சாரால் நான் விலகவில்லை நான் விலகியதற்கு காரணம் சூர்யா தான்.! உண்மை உடைத்த நடிகை..

Mamitha Baiju, Bala Vanangaan Issue: கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் பாலா குறித்த ஏராளமான சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலா தான் இயக்கும் படங்களிலும் இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருபவர் அப்படி அந்த படத்தில் நடிக்கும் அனைத்து பிரபலங்களையும் மிகவும் கடுமையாக வேலை வாங்குவாராம்.

பலரையும் அடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த சூழலில் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வந்தார் பாலா. ஆனால் சில காரணங்களால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக பிறகு அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். வணங்கான் படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மீண்டும் பாலா குறித்த சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

சரியாக நடிக்காததால் தன்னை இயக்குனர் அடித்து விட்டதாக நடிகை மமீதா பைஜு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்த இந்த பிரச்சனையில் பாலா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது எங்கு இந்த விவகாரத்தில் தனது பெயர் கெட்டுப் போய் விடுமோ என்ற பயந்து மமிதா தற்பொழுது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறிய அனைத்தும் முழு விவரமாக தெரியவில்லை ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக கூறியிருப்பது போல் தெரிகிறது. அவர் கூறியிருப்பதாவது, நான் கொடுத்த சிறிய பேட்டியை மட்டும் போட்டு அதனை பெரிய விஷயமாகி விட்டார்கள் நான் அப்படி சொல்லவே இல்லை பாலாவுடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் பணிபுரிந்து இருக்கிறேன். என்னை அவர் நன்றாக பார்த்துக் கொண்டார் உதவி இயக்குனர்களும் சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்.

இதில் எனக்கு பாலா முழு சுதந்திரம் கொடுத்து நடிக்க வைத்தார் சூரியா சார் அந்த படத்திலிருந்து விலகியதால் அந்த படம் எப்படி தொடங்கும் என்ற எண்ணத்தில் நானும் விலகி விட்டேன் என கூறியுள்ளார். மேலும் தனக்கான காட்சிகளும் முடிந்துவிட்டது மீண்டும் இதற்கான நேரம் ஒதுக்க முடியாது என்பதனால் தான் விலகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவை தடுக்க கோபி செய்த சதி!! சூழ்ச்சியிலிருந்து வெல்வாரா பாக்யா.. விறுவிறுப்பான திருப்புங்களுடன் பாக்கியலட்சுமி…

இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது இவ்வாறு சூர்யா விலகிய காரணத்தினால் தான் விலகியதாக கூறி இத்தனை நாள் பாலா குறித்து பரவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை மமிதா பைஜு.