அஜித் ஓகே சொல்லட்டும்.. முதலமைச்சர் நாற்காலி ரெடி.. கொளுத்தி போட்ட பிரபல இயக்குனர்

Ajith : தன்னைத்தானே வளர்ந்து கொண்டவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களில் நடித்து பெண் ரசிகர்களை உருவாக்கிய அஜித் அமர்க்களம், தீனா போன்ற ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென கோடான கோடி ரசிகர்களை உருவாக்கினார்.

தொடர்ந்து ஆக்சன் படங்களில் கவனம் செய்து வருகிறார் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித்குமார் பற்றி பிரபல நடிகரும், இயக்குனருமான ராஜ்கபூர் பேசி உள்ளார்.

சினிமாவில் என்னை தூக்கிவிட்ட விஜயகாந்தை ஒருபோதும் மறக்கவே மாட்டேன் – எமோஷனலாக பேசிய முரட்டு நடிகர்.! கொண்டாடும் ரசிகர்கள்

அவர் சொன்னது என்னவென்றால் அஜித் அப்போ எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்கிறார் நிஜத்தில் நடிக்க தெரியாத நடிகர்  அஜித். அவர் ஒரு சுயம்பு தானா விழுந்து எழுந்து வந்தவர் அவர் மட்டும் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பா முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவார்.

அப்படிப்பட்ட ஜாதகத்தை வைத்திருப்பவர் அஜித் அதனால் அதற்கான விதையை இன்னும் போடவில்லை மௌனமாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒருவேளை வந்தால் கண்டிப்பாக அந்த நாற்காலி அவருக்கு தான் ஆனால் வராமல் போக மாட்டார் பொறுத்திருந்து பாருங்கள் நான் அடிச்சு சொல்றேன் என ஆணித்தரமாக அஜித்தை இந்த அளவுக்கு பேசினார் ராஜ் கபூர்.

சிவகார்த்திகேயனை நம்பி வீட்டில் தங்கிய முன்னணி நடிகை.! சொக்கத்தங்கத்தை உரசி பாக்குறீங்களே உண்மையை உடைத்த பிரபலம்..

ராஜ்கபூர் தனது மனதில் இருந்ததை சொன்னாலும் அஜித்தின் செயல்பாடுகள் இதுவரை அதற்கான ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு போனா ஓடிக்கொண்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..