யோகி பாபுன்னா அவ்வளவு இலக்கணமா போச்சா 500 கொடுத்து என்ன பிச்சையா போடுறீங்க…ஜெயம் ரவியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி சினிமா பயணத்தில் வெற்றிகரமாக அடுத்த பயணத்தை தொடங்குகிறார். அதன்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், சீனி, தனி ஒருவன் 2 தக் லைஃப், கிருத்திகாவின் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து பிஸியாக இருக்கிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் தனது அடுத்த கட்டமாக சினிமா இயக்கும் முடிவிலும் உள்ள ஜெயம் ரவி அதுவும் ஒரே நேரத்தில் மூன்று படங்களை கைவசம் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

இதில் இவரது இயக்கத்தில் முதல் திரைப்படத்தில் யோகி பாபுவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க முடிவெடுத்து இருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து இருப்பதாகவும் அதற்கு 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் இயக்கப் போகும் இரண்டாவது படத்தில் ஜெயம் ரவியே ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.

இதனை அடுத்து மூன்றாம் படத்தில் அவருடன் இன்னொரு ஹீரோவை வைத்து, இல்லை என்றால் இரண்டு முன்னணி நடிகர்களை வைத்தோ படத்தை இயக்க முடிவெடுத்துள்ளாராம் ஜெயம் ரவி. இந்த வருட இறுதியில் இதற்கான அறிவிப்புகளும் அடுத்த கட்ட வேலைகளும் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க கடந்த 2019ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருந்தனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அப்போ சிம்புவுக்கு முன்னாடி இவர்தானா…

இப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இவர்களுடைய காம்போ ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இதனை அடித்தது தற்பொழுது யோகி பாபுவை வைத்து ஜெயம் ரவி இயக்க இருக்கிறார். எனவே 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இருப்பதால் யோகி பாபு என்றால்  உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா? இதுவே வேறு ஒரு டாப் நடிகர் என்றால் இப்படி பண்ணுவீங்களா? என திட்டி வருகிறார்கள்.