வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

siragadikka aasai february 21 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா, சத்யாவின் அம்மா மீனா, மீனாவின் தங்கை அனைவரும் உட்கார்ந்த அழுது கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சூப்பு வைத்து சத்யாவுக்கு கொடுக்க எனக்கு வேணாம் என கூற சத்யாவின் அம்மா இத குடிச்சா தான் எலும்பு சீக்கிரம் கூடும் என பேசுகிறார்.

மாப்பிள்ளையை என் புள்ளையா நெனச்சேன் அவர் இப்படி பண்ணிட்டாரே என அழுது கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஆளாளுக்கு மாறி மாறி அழுது கொண்டிருக்க அந்த சமயத்தில் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார் அண்ணாமலை வந்தவுடன் வாங்க மாமா என மீனா அழைக்கிறார் அது மட்டும் இல்லாமல் சத்தியாவும் கூறுகிறார்.

அப்பொழுது அண்ணாமலை இடம் மீனாவின் அம்மா நான் என் பையன் மாதிரி பாத்துகிட்டேன் ஆனா இந்த மாதிரி பண்ணிட்டாரு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல அவங்க அப்பா போனதுக்கப்புறம் இவன்தானே எல்லாத்தையும் பாத்துக்கிறான் ஆனா இப்படி கையை முறிச்சு போட்டுட்டாரு மாப்பிள இதுக்கு மேல எப்படி இவன் எக்ஸாம் எழுதுவான். ஒரு வருஷம் படிப்பே வீணா போயிடுச்சு என பேசுகிறார்.

முத்து இப்படி செய்யற ஆளே கிடையாது அவன் தப்பு என்று தெரிஞ்சா மட்டும்தான் அடிச்சிடுவான் ஆனா சத்யா விஷயத்துல ஏன் இப்படி நடந்துக்கிட்டான் எனக்கு ஒண்ணுமே புரியல சத்யா உனக்கும் முத்துவுக்கும் எதாவது பர்சனலா பிரச்சனையா என கேட்க அதெல்லாம் எதுவும் கிடையாது என சத்யா கூறி விடுகிறார்.

உடனே நான் முத்து கிட்ட பேசுறேன் என கூறுகிறார் அண்ணாமலை அது மட்டும் இல்லாமல் ரொம்ப செலவாகி இருக்கும் இந்தாங்க காசு என அண்ணாமலை கொடுக்க காசெல்லாம் வேண்டாம் என் பிள்ளைகளுக்கு சம்பாதிச்சு போடுற அளவுக்கு என் உடம்பில் தெம்பு இருக்கு என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் சரி நான் கிளம்புறேன் என அண்ணாமலை கிளம்ப மீனா வழி அனுப்பி விட்டு வருகிறார்.

பிறகு வீட்டிற்கு வருகிறார் அண்ணாமலை மீனாவும் வருகிறார் என்ன எடுத்துட்டு போன காசு கொடுத்து வந்தீங்களா என விஜய் கேட்க அவங்க காசு வேணாம்னு சொல்லிட்டாங்க அவங்க மனசுல நீ எப்பதான் புரிஞ்சிக்க போறியோ என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து வருகிறார் முத்துவை அண்ணாமலை தனியாக அழைத்துச் செல்கிறார் அவரிடம் எதற்காக சத்யாவை அடித்தாய் என கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.