மயங்கி கிடந்தேன் அப்பகூட ஒரு டான்சர் அந்த இடத்தில் கைவைத்து அழுத்தினார்.! சக கிடக்கிற நிலைமையிலும் இப்படி நடந்தது உண்மையை உடைத்த நடிகை.!

Interview with serial actress Sandhya Jagarlamudi: சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாதுகாப்பு என்பது குறைவாகவே தான் உள்ளது பலரும் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் சினிமாவில் வளர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ஒரு நடிகை படப்பிடிப்பில் நடந்த விபத்தால் மயங்கி கிடந்ததாகவும் அப்பொழுது ஒருவர் தனது உடலில் வைக்க கூடாத இடத்தில் கை வைத்ததாகவும் பேட்டியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா ஜெகர்லமுடி செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரை அறிமுகமானார். இதனை அடுத்து அவரது சிறப்பான நடிப்பினால் பல சீரியல்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒரு சீரியல் படப்பிடிப்பின் பொழுது அங்கு இருந்த யானை தூக்கி கீழே தள்ளியது இதனால் சுயநினைவை இழந்ததாக மேலும் பல விஷயங்களையும் பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, யானையால் தாக்கப்பட்டு மயங்கிக் கிடந்த பொழுது நான் சாவை பார்த்துவிட்டு திரும்பி வந்து விட்டேன். நான் பிழைப்பேன் என்று கூட நினைக்கவில்லை, நான் எந்த அசைவம் இல்லாமல் அந்த சமயம் ஒரு பிணம் போல் கிடந்தேன் அப்பொழுது அங்கிருந்த டான்சர்கள் தான் என்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

அந்த நேரத்தில் ஒரு டான்ஸ்  தனது மார்பை பிடித்து அழுத்தினார் அந்த டான்சர் யார் என்று கூட என்னால் தற்பொழுது கூறமுடியாது ஏனென்றால் அந்த சமயத்தில் மயக்கத்தில் இருந்த பொழுது அந்த நிகழ்வு நடந்தது. எனினும் அதனை உணர்ந்து கொண்டேன் என கூறியிருந்தார். இதுவரையிலும் அந்த டான்சர் செய்த வேலை தான் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான அனுபவமாக கருதுகிறேன்.

ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

இந்த விஷயத்தை இதுவரையிலும் எந்தவொரு இன்டர்வியிலும் இது குறித்து நான் பேசியதே கிடையாது. ஏன் எங்க அம்மாவிடம் கூட இது குறித்து பகிர்ந்து கொண்டது கிடையாது என சந்தியா கூறி இருப்பது பலரும் இப்படியெல்லாம் நடக்குமா என அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.