ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில்  மகாவின் குடும்பம் சிற்பம் காணாமல் போய்விட்டது என்பதற்காக அழுது கொண்டிருக்கி ன்றனர்.  அப்போது சிலை ஆர்டர் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி  சிலையை எடுத்துச் செல்வதற்காக அங்கு வந்து விடுகிறார். அவர் வந்து நடந்ததை தெரிந்து கொண்டு எப்படியாவது எனக்கு சிலை வேண்டும் இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு எந்த வழியும் இல்லை மொத்த பணத்தையும் நாங்க இதுல தான் செலவு பண்ணி இருக்கோம் என சொல்லி அழுகிறார்.

உடனே அதற்கு சூர்யா பணம் தான  நான் கொடுக்கிறேன் என சொல்லுகிறார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி இல்ல இன்னும் இரண்டு நாள்ல எங்க ஊர்ல கோவில் திருவிழா இருக்கு சிலை கொடுத்தே ஆகணும் என சொல்கிறார். உடனே சூர்யா மகா விடம் நான் வந்தா சிலையோட தான் வருவேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

மகா பார்த்து பத்திரமா போங்க என அழுதுகிட்டே சூர்யாவிடம் சொல்லுகிறார். சூர்யா காரில் போகும்போதே போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு  சிலையை திருடி போன வண்டியின் நம்பரையும் போலீசுக்கு கொடுத்து டிரேஸ் பண்ண சொல்லுகிறார். போலீஸ் நம்பரை டிரேஸ் பண்ணி எந்த ஏரியாவில் அந்த வண்டி போகுது என்கின்ற வீடியோவை சூர்யாவுக்கு அனுப்புகின்றனர். சூர்யா அந்த வண்டியை தேடி போய்க் கொண்டிருக்கிறார்.

அதே சமயத்தில் பிரபா தனது நண்பர்களை வரச் சொல்லி  அவர்களது நண்பர்களுக்கு whatsapp குரூப் மூலம் இந்த வண்டி நம்பரை அனுப்பி இது எங்கேயாவது பார்த்தா உடனே சொல்ல சொல்லி மெசேஜை அனுப்ப சொல்லுகிறார். அவர்களும் அது போலவே செய்துவிட்டு அந்த வட்டியை தேடி செல்கின்றனர்.

இதற்கிடையில் கௌதம் அந்த ரவுடிகளுக்கு போன் பண்ணி வண்டியை ஊர் ஒதுக்கப்புறமாக உள்ள ஒரு ஏரியில் கொண்டு வந்து அந்த சிலைகளை ஏரியில் போட சொல்கிறார். அதற்கு அந்த ரவுடிகளோ சிலை எல்லாம் அவ்வளவு அழகாக இருக்கு இதனை வித்தால் நம்ம பணம் பாக்கலாம் என கௌதமிடம் சொல்கின்றனர். அதற்கு கௌதம் சிலையை வித்தோம்னா நம்ம போலீஸிடம் மாட்டிப்போம்  நான் சொன்னத செய்யுங்க என சொல்கிறார். அதோடு மட்டுமில்லாமல் போனை வைத்துவிட்டு  மகா உன்னை பழி வாங்காமல் விடமாட்டேன் உங்க அப்பா அம்மாவுக்கு இருக்க வீடு கூட இல்லாமல் நடுத்தரவுக்கு கொண்டு வந்து விட்டு உங்க மொத்த குடும்பத்தையும் நான் அசிங்கப்படுத்துவேன் என தனக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.