விக்னேஷ் சிவன் முன்பு தன்னை அவமானப்படுத்தியதால் ஏழு வருடமாக நயன்தாராவை பழிவாங்கும் முன்னணி நடிகர்…

Actress Nayanthara: கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீப காலங்களாக இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ஏராளமான முன்னணி நடிகர்கள் நயன்தாராவுடன் நடிக்க விருப்பப்பட்டு வருகின்றனர்.

அப்படி நயன்தாராவும் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் பொழுது அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் கால் அடி எடுத்து வைத்த நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

பாக்கியா உங்க மனசுல என்ன ஜான்சி ராணின்னு நினைப்பா. கணேசிடம் வசமாக சிக்கிய அமிர்தா நிலா… ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்..

இதனை தொடர்ந்து பிரபல நடிகர் ஒருவர் நயன்தாராவுடன் நடிக்க மறுத்து வருகிறாராம். கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக பழிவாங்கும் அந்த ஹீரோ குறித்தவும் நயன்தாரா அவமானப்படுத்தியது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது அந்த வாரிசு நடிகர் நயன்தாரா ஹீரோயினாக இருந்தால் தான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.

அப்படி ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் சமீபத்தில் நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதும் அந்த நடிகர் மறுத்ததால் நயன்தாராவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடித்து படங்களை எடுத்துள்ளனர். அப்படி பிடிவாதமாக இருக்கும் ஹீரோ யார் என்றால் நடிகர் அல்லு அர்ஜுன் தான். நயன்தாராவுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே இருக்கும் ஒரு விஷயம் தெரியவந்துள்ளது.

பாக்கியா உங்க மனசுல என்ன ஜான்சி ராணின்னு நினைப்பா. கணேசிடம் வசமாக சிக்கிய அமிர்தா நிலா… ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்..

அதாவது அல்லு அர்ஜுன் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அவார்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்குப் பெற்றார். அப்பொழுது நயன்தாராவிற்கு நானும் ரவுடிதான் படத்திற்காக பெஸ்ட் ஹீரோயின் அவார்ட் கிடைத்துள்ளது அதுக்காக நயன்தாராவிற்கு அவார்ட் கொடுப்பதற்காக அல்லு அர்ஜுனை அழைத்துள்ளார்கள். அல்லு அர்ஜுனும் நயன்தாராவிற்கு அவார்ட்  தருவதற்காக மேடைக்கு வர ஆனால் அவர் கொடுக்கும் பொழுது நயன்தாரா இதற்கு முக்கிய காரணம்  விக்னேஷ் சிவன் தான் அதனால் அவர் கையால் தான் வாங்க ஆசைப்படுகிறேன் எனக் கூறி விக்கியிடம் அவார்டை கொடுக்க சொல்லி அவரிடம் இருந்து வாங்கிவுள்ளார்.

அப்பொழுது இவர்கள் இருவரும் காதலித்து வந்ததால் சிவனை பெருமிதமாக பேசி அல்லு அர்ஜுனை அவமானப்படுத்தி விட்டார் நயன்தாரா. இவ்வாறு நடந்த இந்த விஷயத்தை அல்லு அர்ஜுனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் நயன்தாராவை வேண்டாம் என ஒதுக்க வைத்து வருகிறார்.