நடிகையிடம் எச்ச வேலையை காட்டிய வடிவேலு.. உண்மையை உடைத்த நடிகை..

Comedy Actor Vadivelu: நடிகர் வடிவேலு குறித்து அவருடன் இணைந்து நடித்த ஏராளமான பிரபலங்கள் இவருடைய கோர முகம் பற்றி கூறியுள்ளனர். அதேபோல் தற்பொழுது வரையிலும் சினிமாவில் நடித்து வரும் வடிவேலுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வந்தாலும் சமீப காலங்களாக இவர் குறித்து வெளியாகும் தகவல் பகிர் கிளம்பி வருகிறது.

தன்னை தாழ்த்திக் கொண்டு நடித்து வந்த நடிகர் வடிவேலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு வெற்றினை பெற்று தனக்கான ஒரு இடத்தினை பிடித்த வடிவேலுக்கு இன்னொரு முகமும் உள்ளது அதாவது தன்னைவிட யாரும் சினிமாவில் முன்னேறி சென்று விடக்கூடாது என பொறாமை கொண்டவராம்.

சீரியலில் சன் டிவி க்கே டாப் கொடுக்க வருகிறது ஜீ தமிழ்.. டிஆர்பி-யில் இடம் பிடித்த முக்கிய சீரியல்..! இதோ டாப் 10 லிஸ்ட்…

தன்னுடன் நடிப்பவர்களை தனக்கு கீழே அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் இவர் செய்த அக்கப்போர் கொஞ்சம் நஞ்சமே கிடையாது இதை பல பிரபலங்கள் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் தன்னோடு நடித்த சக பிரபலங்களின் மரணத்திற்கு கூட வராத இவர் விஜயகாந்தின் இறப்பில் நடந்துக் கொண்ட வடிவேலுவின் முறை ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

அப்படி வடிவேலு ஒரு நச்சுப் பாம்பு என காமெடி நடிகை ஆர்த்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒருமுறை வடிவேலுடன் நடிக்க கமிட்டான ஆர்த்தி நடிப்பை பார்த்து ஆஹோ ஓஹோ என புகழ்ந்து தள்ளி உள்ளார் ஆனால் இங்கே பாராட்டி விட்டு அப்படியே இயக்குனரிடம் சென்று அந்தப் பெண் என்னை விட நன்றாக நடிக்கிறார் எனவே அந்த சீனை படத்திலிருந்து தூக்கி விடுங்க என தன் ஒரிஜினல் முகத்தை காட்டியுள்ளார் வடிவேலு.

சினிமாவை நம்பி செய்யும் வேலையை விட்ட நடிகர்கள்.. எந்தெந்த நடிகர் என்ன வேலை செய்தார் தெரியுமா.?

அதோடு மட்டுமல்லாமல் இவருடைய கணவர் கணேஷ் கூட வடிவேலுவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஷூட்டிங் பாட்டிற்கு வந்து மேக்கப் போட்ட பிறகு கூட கணேஷ் வேண்டாம் என அனுப்பி வைத்தாராம். தன்னை வெளியில் நல்லவராக காட்டிக் கொள்ளும் வடிவேலு இதைவிட நல்ல வாய்ப்பு உனக்கு இருக்கு என கூறி அனுப்பி விடுவாராம். இவ்வாறு இது குறித்து கூறியிருக்கும் ஆர்த்தி பாம்பு எப்படி விஷம் மாதிரி இருக்குமோ அதேபோல் தான் வடிவேலு என கூறியுள்ளார்.