செல்வி பார்த்த வேலையால் கைமாறும் கேண்டீன் ஆர்டர்.. பாக்யாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi : பாக்யலக்ஷ்மி இன்றைய எபிசோடில் கேண்டினில் ஒரு செலிப்ரேஷன் இருப்பதால் அதற்கான சாப்பாடை பாக்யா ரெடி செய்துள்ளார். அப்போது ரைத்தாவில் செல்வி உப்பு போட மறந்து விட்டதால் பாக்யா உப்பு போட்டு சரி பண்ணி விட்டு காலேஜுக்கு கிளம்புகிறார். காலேஜில் இனியாவோட பிரென்ட் மாலினி சோகமாய் இருப்பதை பார்த்து என்ன ஆச்சு மாலினி என்று கேட்க..

ஸ்கூல்ல என் கூட படிச்ச பையன் எனக்கு இப்ப ப்ரொபோஸ் பண்ணா எனக்கு அவ மேல லவ் எல்லாம் இல்ல ஆனா நான் இதை சொன்னால் அவன் என்கிட்ட பேசாம போயிடுவான் அது எனக்கு கஷ்டம் ஆயிடும் என சொல்கிறார் அதற்கு பாக்கியா ஸ்கூல்ல ஒண்ணா படிச்சிட்டு இப்ப காலேஜ் தனியா போனதால அவன் உன்னை மிஸ் பண்றான் அதனால தான் அதை லவ் என்று நினைத்துக் கொண்டான்

எடுத்து சொன்ன புரிஞ்சிப்பான், அப்படி புரிஞ்சிக்கலைன்னா அவன் வழில அவன் போகட்டும் நீ உன் வழியில் போ அவ்வளவுதான் பிரச்சனை சரியாயிடும் என்று சொல்கிறார். பிறகு பழனிச்சாமியும் லோபிகாவும் பாக்யாவை பார்க்க காலேஜுக்கு வருகின்றனர். அப்போது செல்வி பாக்யாக்கு போன் பண்ணி அக்கா கேண்டின்ல ஒரு பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்வதும் பாக்கியா பதட்டத்துடன் என்னாச்சு செல்வி என்று கேட்கிறார்.

பிறகு போன் கட் ஆனதும் நேரா பாக்கியா கேண்டினுக்கு வருகிறார் அங்கு ராதிகா செல்வியை பார்த்து என்ன சமைச்சு வச்சிருக்கீங்க வந்தவங்க எல்லாம் காரி துப்பிட்டு போயிட்டாங்க ரைத்தாவ வாயில வைக்க முடியல அவ்வளவு உப்பு கரிக்குது, சாப்பாடே நல்லா இல்லன்னு சொல்லிட்டு போயிட்டாங்க என்று கத்திக் கொண்டிருக்கிறார் அப்போது பாக்யா வந்து சாரி மேடம் என்று சொல்ல சாரி சொன்னா சரியாயிடுமா..

இனி நீங்க இங்க சமைக்கவே முடியாது, உங்க பொருளை எல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புங்க என்று ராதிகா சொல்கிறார் இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார் பாக்யா, பிறகு பாக்யா ஏன் தப்பு தான் நான் இங்கேயே இருந்து இருக்கணும் நீங்க பாத்துப்பீங்கன்னு நினைச்சு நம்பிவிட்டது ஏன் தப்புதான் என்று தலையில் அடித்துக் கொள்கிறார். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.

Leave a Comment