இளையராஜா பாட்டை ஓரம்கட்டிட்டு என் பாட்டை கேளுங்க.! நேரடியாக அப்பாவிடம் மோதிய யுவன்

Yuvan Shankar Raja: இசைஞானி இளையராஜாவை பாடல் மூலம் கலாய்த்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இசை கலைஞராக இருந்து வரும் இளையராஜாவின் பாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது. இவருடைய பாடல்கள் அனைத்தும் பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருப்பதனால் பல புதிய இசையமைப்பாளர்கள் வந்த பிறகும் இவருடைய பாடலை இன்றளவும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

இந்த சமயத்தில் ஏ.ஆர் ரகுமானின் இசையும் ரசிகர்களை கவர ஆரம்பித்தது எனவே இளையராஜாவின் காலம் அவ்வளவுதான் என கூறப்பட்ட நிலையில் இந்த நேரத்தில் இளையராஜாவின் சந்ததிகளும் இறங்கியது. அப்படி தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா.

Aaha Kalyanam : கோடீஸ்வரி மூஞ்சில் பிளாங்க் செக்கை விட்டு எறிந்த ராஜலட்சுமி.. சூர்யாவை பிரைன் வாஷ் பண்ணும் கௌதம்

ஏ.ஆர் ரகுமானின் இசைக்கு சமமாக போட்டி போட்டு வருகிறார் யுவன் சங்கர். யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் பல பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ளார் அப்படி ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்யும்போது இளையராஜாவை கலாய்த்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது குங்குமப் போகும் கொஞ்சம் புறாவும் என்னும் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதில் நந்தவனத்தில் வந்த ராஜகுமாரி என்னும் கரகாட்டக்காரனில் வரும் பாடல் ரீமிக்ஸ் செய்திருப்பார். முட்டத்து பக்கத்தில் இரண்டு கொட்டாய் என்னும் அந்தப் பாடலில் வந்த பழைய பாட்டை தூக்கிப்போட்டு இந்தப் பாட்டை பாடு என வரிகள் இருக்கும் தனது தந்தையை விளையாட்டாக கலாய்க்கும் விதமாக அந்த வரிகளை எழுதியதாக கூறப்படுகிறது.

இந்த ரவுடி இருக்கிற வீட்ல நீ எப்படி சந்தோஷமா இருப்ப முத்துவை பார்த்து சொன்ன சுதா.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இவ்வாறு இந்த பாடலை பாடியவர் வெங்கட் பிரபு இதே பாடலை கரகாட்டக்காரனில் பாடியவர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பாடலிலேயே தனது தந்தையை யுவன் சங்கர் ராஜா கலாய்த்து இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.