Aaha Kalyanam : கோடீஸ்வரி மூஞ்சில் பிளாங்க் செக்கை விட்டு எறிந்த ராஜலட்சுமி.. சூர்யாவை பிரைன் வாஷ் பண்ணும் கௌதம்

Aaha Kalyanam today episode december 18 : இன்றைய எபிசோடில் சூர்யா ஆபீஸில் வேலை பார்க்கும் ஒருவர் இந்த வீடியோவை பாருங்கள் என்று மகா பேசிய வீடியோவை காண்பிக்கிறார்.. பிறகு கௌதம் சூர்யா உடைய நண்பர் ஒருவரிடம் போன் பண்ணி உனக்கு சூர்யாவை பழிவாங்க இதான் சரியான நேரம் நான் சொன்ன மாதிரி பேசு என்று சொல்கிறார்.

அவரும் சூர்யாவுக்கு போன் பண்ணி உங்க வைஃப் பேசுன வீடியோவ பார்த்தேன் உங்களுக்கு செம மூளை முதல்ல தப்பா வந்த வீடியோவை சரி பண்ண மகாவை இப்படி பேச வச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். பிறகு கௌதம் சூர்யாவிடம் மகா ஏன் இப்படி பண்றாங்க.. மகா இப்படி அவங்க வீட்ல போய் வேலை செய்ய அந்த காண்ட்ராக்ட் தானே காரணம்..

அதை கேன்சல் பண்ணிடலாமா என்று சூர்யாவிடம் கேட்க சரி யோசிக்கிறேன் என்று சொல்கிறார்.. அடுத்து ராஜலட்சுமி கோடீஸ்வரி வீட்டிற்கு வருகிறார் வாங்க சம்மந்தி என்று உள்ளே கூப்பிட நான் உள்ள வரல உங்க பொண்ண வேலை செய்ய வச்சு தான் நீங்க சம்பாதிக்கணுமா.. அவ இங்க வந்து மண்ணு வேலை செய்றது எங்க குடும்பத்துக்கு ரொம்ப அசிங்கம் அவளே வந்தாலும் நீங்க இங்க வந்து வேலை செய்யக்கூடாது.

உன் குடும்பத்தை பாரு என்று சொல்லி அனுப்பாமல் அவள வேலை செய்ய வச்சிருக்கீங்க இனிமே அவ இந்த வீட்டுக்கு வரக்கூடாது அப்படி வந்தா இங்கயே வச்சுக்கோங்க.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன் இந்தாங்க பிளாங்க் செக் இதுல என்னோட கையெழுத்து இருக்கு எவ்வளவு அமௌன்ட் வேணாலும் பில் பண்ணிக்கோங்க என்று கோடீஸ்வரி முகத்தில் விட்டு எரிகிறார்.

இந்த ரவுடி இருக்கிற வீட்ல நீ எப்படி சந்தோஷமா இருப்ப முத்துவை பார்த்து சொன்ன சுதா.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு கோடீஸ்வரி எங்க பொண்ணு வாழ்க்கை தான் எங்களுக்கு முக்கியம் இனிமே மகா இங்க வர மாட்டா என்று சொல்லிவிட்டு அந்த செக்கையும் திரும்பி கொடுத்து விட்டார்.. அடுத்து மகா வீட்டிற்கு வருவதும் என்ன உட்கார்ந்து இருக்கீங்க வாங்க வேலை செய்யலாம் என்று அப்பா அம்மாவை கூப்பிடுகிறார்.. பிறகு கோடீஸ்வரி..

நீ இங்க வந்து இனிமே வேலை செய்ய வேனாம், உன் வாழ்க்கையை பாரு என்று சொல்லி அனுப்ப ஏன் இப்படி திடீர்னு பேசுறீங்க உங்களை யார் என்ன சொன்னாங்க சொல்லுங்க என்று கேட்பது பிறகு கோடீஸ்வரி உங்க மாமியார் வீட்டுக்கு வந்தாங்க இனிமே மகா இந்த வீட்டுக்கு வந்து வேலை செய்யக்கூடாது.

ஏம்மா ராகினி இன்னுமா உனக்கு கண்ணு தெரியல.! உன் புருஷன் வாங்கினது போதாதா நீயும் வாங்கி கட்டிக்கனுமா..

அதனால பெரிய பிரச்சனை ஆயிடுச்சு உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன் மகா இங்க வந்து வேலைக்கு செய்யக்கூடாதுன்னு சொல்லி இருந்தாங்க அதனாலதான்மா என்று சொல்ல, எங்க மாமியார் வந்து பேசுனாங்கன்னா எப்படி சொல்லி இருப்பாங்கன்னு எனக்கு புரியுது என்று மகா சொல்கிறார்..

அடுத்து கௌதம் சித்ராதேவி இடம் இன்னைக்கு ஆபீஸ்ல என்ன நடந்தது தெரியுமா என்று சூர்யாவை வைத்து மகா ஓட ஆர்டர கேன்சல் பண்ண சொல்லி இருக்கேன் இதனால மகாவுக்கும் சூர்யாவுக்கும் பெரிய பிரச்சனை வரட்டும் அத பாத்து நம்ம சந்தோஷப்படலாம் என்று சொல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..