லியோவின் ஃப்ளாஷ் பேக் உண்மையா? பொய்யா? இருக்கும் ட்விஸ்ட் என்ன? விஜய் ரசிகர்களின் தியரி

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் அது குறித்த தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இவருடைய இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் லியோவை தொடர்ந்து ரஜினிகாந்தின் படத்தினை இயக்க இருக்கிறார். அப்படி ஒவ்வொரு காட்சியையும் உன்னிப்பாக கவனித்து பல மாசான காட்சிகளை தந்து வரும் இவர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அப்படி முக்கியமாக லியோ படம் எல்சியுவிற்குள் வருவதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

பொண்டாட்டி பெயரில் இருக்கும் மொத்த சொத்தையும் ஆட்டையை போடும் அர்ஜுன்.! ராகினி இப்ப கூட உனக்கு புரியலையா.. தமிழும் சரஸ்வதியும்

அப்படி இரண்டாவது பாகமும் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிளாஷ்பேக் காட்சிகள் கமல் பேசியிருப்பார் இதுவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. ஹெரால்டு தாஸ் லியோவை சுட்டதாக கதையில் காண்பிக்கப்பட்டது எனவே குண்டு அடி பட்ட தழும்புகள் உடலில் இல்லையே என்று ஒருபுறம் குழம்பி போய் நிற்க மற்றொருபுறம் மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தின் பார்வையில் தான் லியோவின் கதை சொல்லப்பட்டது.

இதனால் இந்த கதையே பொய்தான் லியோவின் கதை பார்த்திபன் சொன்னால் மட்டுமே நிஜம் என கதைக் களத்தை கூறினர். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் இருதயராஜ் டிசோசா என்ற கதாபாத்திரம் சொன்னது பொய்யானதாக கூட இருக்கலாம் என்று வைக்கப்பட்டது.

அப்பாவுக்கு தெரியாமல் மீனாவிடம் பேசும் செந்தில்..! ராஜி மீது கோபப்படும் கதிர், அரசி – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

மன்சூர் அலிகான் பிளாஷ்பேக் சொல்லும் பகுதியை பார்க்கும் பொழுது என்னுடைய பார்வையில் இருந்து தான் இந்த கதை சொல்கிறேன் என்ற டயலாக் இருந்தது ஆனால் அவர் சொல்வது பொய் என தெரிந்துவிடும் என்பதால் அதனை எடுத்து விட்டோம் என கூறினார். இதனால் லியோ படத்தின் இரண்டாவது பாகம் லியோவின் நிஜ வாழ்க்கையுடன் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.

பிளாஷ்பேக் பொய் என்றாலும் அதனை ஏன் படத்தில் இருந்து எடுக்க வேண்டும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூற இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாதி சரியில்லாததற்கு காரணம் என்னுடைய தவறுதான் என்று லோகேஷ் ஒப்புக்கொண்டு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இவ்வாறு லியோ படத்தின் விமர்சனங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒவ்வொன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர்.