பொண்டாட்டி பெயரில் இருக்கும் மொத்த சொத்தையும் ஆட்டையை போடும் அர்ஜுன்.! ராகினி இப்ப கூட உனக்கு புரியலையா.. தமிழும் சரஸ்வதியும்

thamizhum saraswathiyum serial today episode November 1 :தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி தன்னுடைய குழந்தையை குளிப்பாட்டி பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அர்ஜுன் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ராகினி உங்க அப்பா பாரு உன்னை தூக்கமா கூட வேலை செஞ்சுட்டு இருக்காரு என பேச உடனே ஆபீஸில் புது ஆர்டர் வந்துள்ளது அந்த வேலை விஷயமா தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என அர்ஜுன் கூறுகிறார்.

பாப்பா குளித்ததால் காதில் எண்ணெய் ஊற்ற வேண்டும் எனவும் தலைகீழ முடிய பிடிச்சு தூக்கி தப்பி விட வேண்டும் எனவும் கூறுகிறார் இதனால் அதிர்ச்சி அடைந்த ராகினி அப்படியெல்லாம் செய்யக்கூடாது எங்க அம்மா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அது குழந்தைக்கு பிரச்சனையாகி விடும் எனவும் எதுவாக இருந்தாலும் டாக்டரிடம் கேட்டுவிட்டு தான் செய்ய வேண்டும் எனவும் எங்க அம்மா சொல்லி இருக்காங்க எனக் கூறி விடுகிறார்.

50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? விளம்பரத்தில் நடிக்க மட்டுமே இத்தனை கோடியா.?

இதனால் கடுப்பான அர்ஜுனின் அம்மா அப்ப எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்றியா என கேட்க அப்படி நான் சொல்லல சின்ன வயசுல இருந்து என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு எங்க அம்மா என்ன சொல்லிக் கொடுத்து தான் வளர்த்திருக்காங்க என பேசுகிறார். அடுத்த காட்சியில் ராகினி குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே போனவுடன் அர்ஜுனனின் அம்மா அர்ஜுனிடம் இவ என்ன இவ்வளவு திமிரா பேசுற எதுக்கெடுத்தாலும் கோதை கோதை என்கிறார் மறுபடியும் ஒட்டிப்பாங்களோ என பேச இதுக்கெல்லாம் ஒரு முடிவு வைக்கிறேன் என அர்ஜுன் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் கம்பெனியில் பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கிறது அந்த சமயத்தில் சரஸ்வதி அனைவருக்கும் டீ போட்டுக் கொடுக்கிறார் மேக்னா சாப்பிடாமல் இருப்பதால் தமிழ் உடனடியாக போய் சாப்பிட்டு வாருங்கள் என கூறுகிறார் உடனே மீட்டிங் அனைத்தையும் கேன்சல் செய்துவிட்டு சாப்பிட கிளம்புகிறார் மேக்னா வீட்டிற்கு சென்றவுடன் பசிக்குது ஏதாவது செஞ்சுதாம்மா என கேட்க இதோ அஞ்சு நிமிஷத்துல செஞ்சு தரேன்னு வேலைக்கார அம்மா சமைக்க போகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் சாப்பிடும் பொழுது விக்கல் வருகிறது யாரோ உன்னை நினைக்கிறார்கள் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் கட்டின பொண்டாட்டி நான் இங்க இருக்கேன் யாரு நினைக்க போற என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த பக்கம் அர்ஜுன் மொத்த சொத்தையும் தன் பெயரில் எழுதி வாங்க பிளான் பண்ணி விட்டார் என்ன பிளான் வைத்துள்ளார் என அர்ஜுன் குடும்பம் கேட்க நான் சொன்னா தான்  ராகினி கேட்க மாட்டா சந்தேகம் வரும் ஆனா சொல்ல வேண்டிய ஆள் சொன்னா கண்டிப்பாக கேட்பா எனக் கூறுகிறார்.

புருஷன் கிட்ட சொல்லாமல் அந்த காட்சியில் நடித்ததால் வந்த பிரச்சனை.? ரீமாசென் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

அந்த சமயத்தில் ஆடிட்டர் வருகிறார் அப்பொழுது ராகினியும் உட்கார வைத்து சேர்மன் போஸ்ட் எம்டியாக இருக்கிறது அதில் உடனடியாக யாரையாவது உட்கார வைக்க வேண்டும் என கூறுகிறார் உடனே அர்ஜுன் நல்லவன் மாதிரி ராகினி நீயே சேர்மன் போஸ்ட்க்கு வா என கூற உடனே அர்ஜுனன் மாமா அவங்களுக்கு ஹாஸ்பிடல் கட்டிக் கொடுத்தா கூட பார்த்துப்பாங்க பிசினஸ் பற்றி என்ன தெரியும் என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுனனின் அம்மா அவளை பச்சை உடம்புக்காரி இப்ப வீட்லதான் இருக்கணும் அவள் எல்லாம் எங்கேயும் போகக்கூடாது என கூறி விடுகிறார்.

உடனே ராகினி தன்னுடைய வாயாலயே அர்ஜுன் நீங்க தானே எல்லா பிசினஸையும் பாத்துக்குறிங்க நீங்களே சேர்மன் ஆக இருங்க  அதுக்குண்டான வேலையை பாருங்க ஆடிட்டர் சார் என அவரே கூறிவிடுகிறார் அர்ஜுன் எதிர்பார்த்தது போல் மொத்த சொத்தையும் எழுதி வாங்க பக்கவாக பிளான் போட்டு ராகினி வாயாலேயே கூற வைத்து விட்டார்.

ராகினி அனைத்து சொத்தையும் எழுதி கொடுப்பாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.