இந்த 3 ஹீரோ கூட படம் பண்ணும் போது ரொம்ப பாதுகாப்பாக இருப்பேன் – நடிகை ஜோதிகா

Jyothika : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகி ஜோதிகா. இவர் முதலில் ஹிந்தி படத்தில் மூலம் அறிமுகமானார் தமிழில் அஜித்தின் வாலி படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். முதல் படத்திலேயே தனது திறமையும், அழகையும் காட்டினார் அதனை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார்..

முகவரி, குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, தெனாலி, லிட்டில் ஜான், தாம் தூம், ஸ்டார், திருமலை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். சினிமா உலகில் எட்டாத உயரத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மழையில் நனைந்தபடி மொத்த அழகையும் காட்டிய தர்ஷா குப்தா.. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!

இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. அதன் காரணமாக  சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு பெண்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அப்படி இவர் நடித்த மகளிர் மட்டும், ஜாக்பாட், உடன்பிறப்பே ஆகிய படங்களை தொடர்ந்து 2023 இல் கைவசம் மலையாளத்தில் ஒரு படம், ஹிந்தியில் இரண்டு படம் பணி வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா பழைய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது என்னவென்றால்..

வேற லெவல் ஸ்கிரிப்டில் விஜய் சேதுபதி உடன் இணையும் வெற்றிக் கூட்டணி.! தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பாளர் அப்டேட்

நிறைய நடிகர்களுடன் நடிக்கும் பொழுது பாதுகாப்பு இருக்காது என்னுடைய கேரியரில் நடிகர் சூர்யா, அஜித் மற்றும் மாதவன் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் போது ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.