விஜயகாந்த் வெள்ளந்தியான மனுசன்.. ரொம்ப மிஸ் பண்றேன் – எமோஷனலாக பேசிய ஆனந்தராஜ்

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் 80,90 காலகட்டத்தில் கிராமத்து கதை அம்சமுள்ள படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார் ரஜினி, கமலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை விஜயகாந்த் பிடித்தார் இப்படிப்பட்ட விஜயகாந்த் திரை உலகில் பலருக்கும் உதவியோடு..

மட்டுமல்லாமல் தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் லைட் மேன் தொடங்கி டாப் ஹீரோ வரை அனைவருக்கும் கறி விருந்து சாப்பாடு போட்டு அழகு பார்த்தார் மேலும் இல்லாதவர்களுக்கு உதவி செய்த விஜயகாந்த் பேரையும் புகழையும் சம்பாதித்தார். திடீரென அரசியலில் என்ட்ரி கொடுத்தார்.

விஷ்ணுவுக்கு ஃபர்ஸ்ட் டார்கெட் நான் தான்.. மாயா இந்த கேம் விளையாட மாட்டேன் – பிக்பாஸ் ப்ரோமோ

எம்எல்ஏவாக முதலில் அரியணை ஏறினார் அதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவராக பொறுப்பை ஏற்றார் கட்சியை சிறப்பாக வழி நடத்தி வந்த விஜயகாந்த் உடல்நல குறைவு ஏற்பட்டதால் சற்று ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது மருத்துவர்கள் கண்காணிப்பில் விஜயகாந்த் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் பற்றி பேசி வருகின்றனர் அப்படி ஆனந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது விஜயகாந்தை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்.. எம்ஜிஆருக்கு எப்படி நம்பியாரோ அதேபோல விஜயகாந்த் படத்தில் இந்த ஆனந்தராஜ் என கூறினார்.

சித்ராதேவியிடம் கையும் களவுமாக மாட்டிய ஐஸ்வர்யா.. காப்பாத்தி விட்ட மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

ஒரு தடவை விஜயகாந்த்  தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து ஆனந்தராஜ் எங்க நீ தான் இந்த படத்துல ஹீரோ.. நான் இரண்டாவது என கூறினார். அவர்தான் ஹீரோ என நான் சொல்லித் தேவையில்லை எல்லோருக்குமே தெரியும் இருந்தாலும் அவர் என்னையும் புகழ்ந்து பேசினார் அவர் வெள்ளந்தியான மனுஷன் என விஜயகாந்தை பற்றி பெருமையாக பேசினார்.