ஐட்டம் டான்ஸ் மூலம் மூட்டையில் சம்பளம் வாங்கும் நடிகைகள்.! அடேங்கப்பா ஒரேஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா…

Indian Actress: ஹீரோயினாக நடித்து வந்த நடிகைகள் கூட ஐட்டம் டான்ஸ் ஆடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அப்படி சமீப காலங்களாக தமன்னா, சமந்தாவின் குத்தாட்டம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஐட்டம் டான்ஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தான்.

இவரைத் தொடர்ந்து மும்தாஜ், பாலிவுட்டில் சன்னி லியோன், கத்ரீனா கைஃப், டோலிவுட்டில் தமன்னா என பல நடிகைகளும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். அந்த வகையில் ஒரு படத்தில் ஹீரோயினாக முழுவதுமாக நடித்தால் 10 கோடி முதல் 12 கோடி வரை நடிகைகளுக்கு சம்பளம் தரப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் சமாதிக்கு சென்ற பிக்பாஸ் பூர்ணிமா.. 16 லட்சத்தை தூக்க இதுதான் காரணமாம்.. அவரே சொன்ன ரகசியம்

ஆனால் நடிகர்களுக்கு 100 முதல் 200 கோடி சம்பளம் கொடுக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு ஒரு பாடலுக்கு ஒரு படம் முழுவதும் வாங்கும் சம்பளத்தை நடிகை ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவதன் மூலம் பெற்று விடுகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் ஐட்டம் டான்சராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இருப்பவர்தான் நடிகை மலைகா அரோரா.

இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் இடம் பெற்ற தக்க தையா தையா.. பாடலுக்கு ரயில் மீது ஏறி கொண்டு நடனம் ஆடினார். ஆனால் இந்த நடனத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்க வில்லையாம். மேலும் பாகுபலி படத்தில் குத்தாட்டம் போட்ட நோரா ஃபதேகி கூட இந்த அளவிற்கு சம்பளம் வாங்கியது கிடையாது.

பிரதீப்பிடம் சத்தியம் வாங்கினாரா பூர்ணிமாவின் அம்மா? உடைந்த உண்மைகள்..

அதேபோல் இந்தியாவிலேயே குத்தாட்டம் போடுவதற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சன்னிலியோன் உள்ளார். ஆனால் அனைத்து ஐட்டம் டான்ஸ் நடிகைகளையும் ஓவர் டேக் செய்த நடிகை சமந்தா தான் தற்பொழுது அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அதன்படி புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டதற்காக சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாராம். ஆனால் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனாவிற்கு ரூபாய் 4 கோடி ரூபாய் தான் சம்பளம் என கூறப்படுகிறது.