பிரதீப்பிடம் சத்தியம் வாங்கினாரா பூர்ணிமாவின் அம்மா? உடைந்த உண்மைகள்..

Bigg Boss pradeep Antony: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பின்னர் மறைக்கப்பட்ட பல உண்மைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஆண்டனி பகிர்ந்து உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது. முந்தைய சீசன்களை விட பல மாற்றங்கள், புதிய விதிமுறைகளுடன் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயா, பூர்ணிமாவின் ஏஜென்ட் டீம் சேர்ந்து கொண்டு பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினர்.

எனவே இதனால் கடுப்பான ரசிகர்கள் ஏஜென்ட் டீமை கழுவி ஊற்றி வந்தனர் மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு பிரதீப்பால் இல்லை என மாயா, பூர்ணிமா, ஐஷு, ரவீனா ஆகியோர்கள் உரிமை குரல் எழுப்பியதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது இதை தான் முக்கியமாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதெல்லாம் அநியாயம் என கூறி வந்தனர்.

BIGG BOSS 7 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. வெறும் கையுடன் போறத நினைச்சு புலம்பும் போட்டியாளர்கள்!

இந்நிலையில் பூர்ணிமா தற்பொழுது ரூபாய் 16 லட்சத்துடன் கூடிய பணப்பெட்டியை எடுத்துக் கொண்ட பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். பூர்ணிமா வெளியேறும் உடன் சில முட்டாப்பயலை எல்லாம் காசு முதலாளி ஆக்குதாடா என்ற பாடலை பிரதீப் பதிவிட்டு இருந்தார். பூர்ணிமாவை கில்லாடிக்கும் வகையில் தான் இந்த பாடலை பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

Bigg Boss 7 pradeep Antony
Bigg Boss 7 pradeep Antony

இதனை அடுத்து இதனால் கடுப்பான பிரதீப் பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியாக இருக்கேன் கூலிக்கு மாரடிக்கிற கும்பல் எல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாயை கிளறாதீங்க பொழச்சு போங்க உங்க பொழப்ப கெடுக்க மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து பூர்ணிமா ரசிகர்கள் பிரதீப் பூர்ணிமாவின் குடும்பத்தை கிண்டல் அடிக்கும் விதமாக பதிவிட்டு வந்ததால் அவரின் குடும்பத்தை இழுத்து பேச தொடங்கினார்.

மனைவியை பக்கத்தில் வச்சுக்கிட்டு நடிகைக்கு அம்பு விட்ட 5 ஹீரோக்கள்.. அலறவிட்ட மிஷ்கின்

எனவே இதனால் கோபமடைந்த பிரதீப் ஃபர்ஸ்ட் வெளியில வர போட்டியாளர்கள் கிட்ட பிக் பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பால் இருக்கான்னு கேட்டுட்டு என்னை வந்து கலாயிங்க என் குடும்பத்தை இழுங்க என் மனநிலை பற்றி பேசுங்க சும்மா ஒன்னும் தெரியாம யூகத்தை தூக்கிக்கிட்டு வராதீங்க என் மடியில கனமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Bigg Boss 7 pradeep Antony
Bigg Boss 7 pradeep Antony

அதோடு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பிரதீப் என்ன அடிச்சி சாவடிச்சி டைட்டில எடுத்துக்கணும்னு நான் தான் சொன்னேன் அவங்க பெருந்தன்மையா பொம்பள case போட்டு அனுப்பிட்டாங்க அப்படி தான் நான் பார்க்கிறேன். உண்மையில் நான் யாருக்கும் எதிரானவன் அல்ல இந்த சீசன் முடிந்ததும் நான் போய் சம்பளம் வாங்கிகிட்டு வரேன் அநியாயத்துக்கு டாக்ஸிக்கா இருக்கு என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.