கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் என்னால் முடியாது என விஜயகாந்த் நடிக்கு மறுத்த 5 கதாபாத்திரங்கள்..

Captain Vijayakanth: மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் தற்போது நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய நினைவுகள் எப்பொழுதும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அப்படி இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட்  திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவ்வாறு இவர் கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்த ஐந்து கதாபாத்திரங்கள் குறித்து பார்க்கலாம்.

1. தமிழ் திரைப்படத்தை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்துள்ளார். அப்படி இவருக்கு கிடைத்த வாய்ப்புகளையும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

2. இதனை அடுத்து விளம்பரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதனால் அது மிகவும் தீங்கானது என்பதற்காக கோடி ரூபாய் கொடுத்தாலும் விளம்பர படங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்து இறுதி வரையிலும் நடிக்காமல் இருந்துள்ளார்.

3. நடிப்பில் கூட வில்லனாக இருக்க முடியாது என தனது சினிமா வாழ்க்கையில் ஒரு படத்தில் கூட வில்லானாக நடிக்காமல் இருந்துள்ளார் கேப்டன். நெகட்டிவ் கேரக்டர் என்றாலே அந்த அளவிற்கு வெறுத்துள்ளார்.

4. ப்ளே பாய்யாக நடிப்பது, பெண்களுடன் மரியாதை குறைவாக சித்தரிப்பது போன்ற படங்களை சுத்தமாக விரும்பாத விஜயகாந்த் இது போன்ற படங்களில் இதுவரையிலும் நடித்ததே கிடையாது.

அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..

5. அதிகமான சம்பளத்திற்கு ஆசைப்படாத ஒரே நடிகர் என்றால்  நடிகர் விஜயகாந்த் தான் என பல இயக்குனர்கள் கூறியுள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்கு பிடிக்காத செயலில் விஜயகாந்த் ஈடுபட மாட்டாராம்.