அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..

Janhvi Kapoor: அஜித், தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பிற்காக ஏராளமான இளம் நடிகைகள் காத்து வருகின்றனர் இப்படி ஒரு சூழலில் பிரபல நடிகை ஜான்வி கபூர் இவர்களுடன் நடிக்க மறுத்திருப்பதால் ரசிகர்கள் இவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக இருக்கும் அஜித், தனுஷ் இருவரும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர்.

இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும் நிலையில் ஜான்வி காவூர் தனது அப்பா கூறியும் இவர்களுடன் நடிக்க மறுத்துள்ளாராம். அதாவது பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியினரின் மகள்தான் ஜான்வி கபூர். சமீப காலங்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் ஹிந்தியில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? காதலன் சொன்னதால் நடிக்க மறுத்து பிறகு தலையில் அடித்துக் கொண்ட நடிகை..

தமிழில் அஜித் குமார் மற்றும் தனுஷ் ஆகியோர்கள் தங்களது படங்களில் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பல முயற்சிகள் செய்துள்ளனர். அந்த வகையில் அஜித்குமார் படங்களை தயாரித்த போனி காபூர் அஜித் படத்தில் நடிக்குமாறு ஜான்வி கபூரிடம் அறிவுறுத்திவுள்ளார். ஆனால் இதற்கு ஜான்வி கபூர் எனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லை என்னை விட வயது அதிகமாக உள்ள அவருடன் எப்படி நடிப்பது என ஜான்வி கபூர் மறுத்துள்ளார்.

அதன் பிறகு தனுஷுடனும் நடிக்க மறுத்த ஜான்வி கபூர் சூர்யா என்றவுடன் உடனே ஓகே சொல்லி உள்ளாராம் இது கோலிவுட்டியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஏன் இவர் லுக்கை பார்த்து தான் இப்படி பண்ணுகிறாரா? தனுஷ்க்கு என்ன குறைச்சல் எனவும் கேட்டு வருகிறார் தமிழ் சினிமா ரசிகர்கள்.

சிவகார்த்திகேயன் முதல் சதா வரை இன்று பிறந்தநாள் கொண்டாடும் 6 சினிமா பிரபலங்கள்..

இது ஒரு புறம் இருக்க சமீப நேர்காணல் ஒன்றில் ஜான்வி கபூர் ஆண்கள் குறித்து தனது அபிப்ராயங்களை வெளிப்படையாக கூறியிருந்தார் அவர் கூறுகையில் பெண்களை பார்க்கும் பொழுது பெண்களின் முன்னழகு அல்லது கழுத்து பகுதியை பார்த்து பேசும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காது யார் கண்களைப் பார்த்து பேசுகிறார்களோ அப்படிப்பட்ட ஆண்களை தான் பெண்கள் மதிப்பார்கள் என கூறியுள்ளார்.