விஜய் டிவியே வேண்டாம் என ஓட்டம் பிடித்த 5 பிரபலங்கள்.! கல்லாலும் செருப்பாலும் அடி வாங்கிய பிரபலம்..

Vijay Tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். அப்படி விஜய் டிவியில் பணியாற்றியதன் மூலம் தற்பொழுது வெள்ளித் திரையில் கலக்கி வரும் ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கரைத் தொடர்ந்து நடிகைகளும் உள்ளார்கள்.

இவ்வாறு விஜய் டிவியின் மூலம் ஏராளமான பிரபலங்கள் பிரபலமடைந்து இருந்தாலும் அதே போல் விஜய் டிவியினால் பல பிரச்சனைகளில் சிக்கியவர்களும் இருக்கின்றனர். அப்படி விஜய் டிவியே வேண்டாம் என ஓட்டம் பிடித்த 5 பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

Vj அர்ச்சனா: சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுப்பாளராக மக்கள் மனதில் குடியேறியிருப்பவர் தான் அர்ச்சனா. மக்கள் மத்தியில் தனக்கான ஒரு நல்ல இமேஜை பிடித்து வைத்திருந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

நடுரோட்டில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான நடிகை கீர்த்தி சுரேஷ்.! இவருக்கே இப்படி ஒரு நிலமையா..

தற்பொழுது வரையிலும் இவருக்கு எதிராக ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் விஜய் டிவியே வேண்டாம் என ஜீ தமிழ்க்கு சென்று விட்டார்.

ரட்சிதா மகாலட்சுமி: சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இளவரசியாக இடம் பிடித்தவர் தான் ரட்சிதா. இவர் ரியோவுடன் இணைந்து சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட நிலையில் இவரும் ஒரு கட்டத்தில் விஜய் டிவியிலிருந்து வெளியேறினார்.

பாவனா: தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமான பாவனா தற்பொழுது கிரிக்கெட்டில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். விஜய் டிவியில் சில வருடங்கள் தொகுப்பாளராக பணியாற்றி வந்ததால் பங்கமாக இவரை கலாய்த்து வந்தனர்.

இந்த வாரம் வெளியேறும் புல்லிங் குரூப் உறுப்பினர்.. சூனியக்காரி மாயாவால் வந்த வினை.!

கல்யாணி: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகவும் மக்கள் மத்தியில் பிரபலமாகி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் கல்யாணி. இவர் மிகவும் ஒல்லியாக இருந்ததால் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் அதிகமாக இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர் எனவே இதனால் விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்.

ஜூலி: இந்த நான்கு பேரை விட கல்லாலும், செருப்பாலாலும் அடி வாங்கியவர் தான் ஜூலி. அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்தார். இவர் எங்கு போனாலும் ரசிகர்கள் விரட்டி விரட்டி அடித்து வந்தனர் எனவே தற்போது வரையிலும் அந்த நெகட்டிவ் விமர்சனம் இருந்து தான் வருகிறது.