சிம்புவும் நயன்தாராவும் போன்ல இப்படியா பண்ணுவாங்க.. நான் பார்த்து பதறிட்டேன் பிரபல தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்..

Actress Nayanthara: சிம்புவும் நயன்தாராவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகள் குறித்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிம்புவும் நயன்தாராவும் காதல் ஜோடிகளாக வளம் வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர்கள் வல்லவன் படத்தில் நடிக்கும் போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. வல்லவன் படத்தினை சிம்பு இயக்கிய நிலையில் ஷூட்டிங் போது டேட்டிங் செய்ததாகம் பேசப்பட்டது மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் சில காலங்களிலேயே பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு புடவையில் நடிக்கும் மேகனாவா இது.. ஆத்தாடி இம்புட்டு கவர்ச்சியா அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்து வந்தார் ஆனால் இவர்களுக்கு இடையேவும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பிறகு  நயன்தாரா நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் பொழுது இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். பிறகு ஏழு ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள் ஜூன் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.

தற்பொழுது இந்த தம்பதியினரக்கு இரட்டை ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வல்லவன் பட சூட்டிங் சமயத்தில் சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து செய்த சேட்டைகள் குறித்து தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேட்டி அளித்துள்ளார். அதாவது நயன்தாராவும் சிம்புவும் தன்னுடைய போனை எடுத்து நடிகை கோபிகாவின் நம்பருக்கு ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி விட்டார்களாம்.

இந்த வருடம் 4வது இடத்தில் தனுஷ், 5வது இடத்தில் சிவகார்த்திகேயன்.. முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா..?

பிறகு மறுநாள் கோபிகா போன் போட்டு என்ன சார் இப்படி எல்லாம் மெசேஜ் பண்ணி இருக்கீங்க என கேட்டார் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை பின்னர் போனை பார்த்தேன் அந்த மெசேஜ் இருந்தது நானும் ஷாக் ஆகிவிட்டேன். அப்புறம் தான் நைட் சிம்புவும் நயன்தாராவும் என் ஃபோனை வைத்து இப்படி அனுப்பினார்கள் என்பது தெரிந்ததும் கோபிகாவிடம் நடந்ததை எடுத்துக் கூறி சமாளித்தேன். இப்படிதான் நயன்தாரா தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேட்டைகள் செய்வார் என தேனப்பன் கூறியுள்ளார்.