ரவுடிகளிடம் மாட்டிக் கொண்ட தர்ஷினி.. கல்லுக்குள் ஈரம் என்பதை நிரூபித்த கதிர்.. கண்ணீரில் மிதக்கும் நந்தினி.

Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள் இந்த நிலையில் தர்ஷினி காணாமல் போய்விடுகிறார் அவரை கடத்தி கட்டி போட்டு வைத்துள்ளார்கள் ஆனால் யார் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

குடும்பப் பெண்கள் அனைவரும் எப்படியோ மோப்பம் நாய் போல் ஆங்காங்கே விசாரித்து அவர்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இங்கு குணசேகரன் ஜீவானந்தம் தன்னுடைய மகளை கடத்திச் சென்றுள்ளது என தேடிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய அம்மா உயிருடன் இருப்பதை உளறிய ரோகிணி.! கறி கடை பாயால நீ மாட்ட மாட்ட உன் வாயாலயே நீ மாட்டிப்ப..

ஆனால் ரவுடிகள் தான் தர்ஷினியை கடத்தி இருக்கிறார் ஜனனிக்கு ஒரு வழியாக தெரிய வருகிறது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் கோவிலில் குடும்பப் பெண்கள் அதாவது நந்தினி, ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா என அனைவரும் கோவிலில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கதிர் நந்தினிக்கு போன் பண்ணுகிறார்.

நீ என்னதான் அதட்டி கூப்பிட்டாலும் நான் வர முடியாது என நந்தினி திட்டவட்டமாக கூறுகிறார் அப்பொழுது கதிர் உன்னை யாருடி வர சொன்னா எப்படியாவது தர்ஷினியை கண்டுபிடித்து கூட்டிட்டு வா என கூறுகிறார் கதிர் அதுவரைக்கும் காவியாமா என்ன பாத்துக்கிறா என கதிர் நந்தினி இடம் அழுகிறார்.

ஆண்பாவம் திரைப்படத்தில் நடித்த பாண்டியனின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா…!

உடனே இவ்வளவு பிரச்சனைக்கு இடையிலயா இந்த அக்கறை எல்லாம் வரணும் என பேசுகிறார் ஜனனி உடனே ஈஸ்வரி தர்ஷினி நீ எங்கமா இருக்க என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது தர்ஷினி கட்டிப்போட்டு கிடக்கிறார் அதனை காட்டுகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.