ஜான்சி ராணியின் கொட்டத்தை அடக்கிய சக்தி.! கதிரை கட்டி போட்டு அடிக்கும் கௌதம்.. பதட்டத்தில் மருமகள்கள்

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது கதிர் ஜீவானந்தத்தின் அடியாட்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டு வருகிறார்.

அதாவது ஜீவானந்தம் கிடைக்கும் பொழுது அவரை செஞ்சி விட வேண்டும் என கதிர் வெறியுடன் காத்து வந்த நிலையில் கடைசியில் அவரே ஜீவானந்தத்திடம் மாட்டி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது கதிர் ரவுடி கில்லியுடன் அப்பத்தாவையும், ஜீவானந்தத்தையும் பழிவாங்குவதற்காக பல முயற்சிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் திடீரென ஒரு பெண்ணிடம் பேச ஆரம்பித்ததால் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை நேரில் பார்ப்பதற்காக செல்கிறார். ஆனால் அந்த பெண் பாசமாக பேசி வேண்டுமென்றே கதிரை வர வைத்துள்ளார் இந்த நேரத்தில் கௌதம் அடியாட்களுடன் கதிரை பிடிக்கிறார்.

அஜித் பத்திரிகையாளர்களை பார்ப்பதில்லை, ஒதுக்கி வருகிறார் என சொல்பவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்.

கதிர் அந்த பெண்ணிடம் பேசும் பொழுது கரிகாலன் எவ்வளவோ தடுத்தும் ஆனால் கதிர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது கதிர் எங்கு இருக்கிறார் என்பதே கரிகாலன் கில்லிக்கு தெரியாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜான்சி ராணி வீட்டு மருமகளிடம் சண்டை போட்டு வரும் நிலையில் அங்கு இருக்கும் சக்தி கோபப்பட்டு ஜான்சி ராணியிடம் மரியாதையா சொல்ற முதல இங்கு இருந்து கிளம்பு என்ன பத்தி எல்லாம் உனக்கு தெரியாது செஞ்சி விட்டுட்டு போயிட்டே இருப்பேன் என்று மிகவும் கோபமுடன் கூறுகிறார்.

பிகில் முதல் லியோ வரை.. பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய தளபதி படங்கள்.!

மறுபுறம் கதிரை கட்டி வைத்து கௌதம் அடியாட்களுடன் அடித்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கரிகாலன் கில்லியிடம் கதிர் பொம்பள ஆளுகிட்ட பேசிகிட்டு இருந்தான் அதை கூட உனக்கு கண்டுபிடிக்க தெரியல என்று சொல்ல அதற்கு கில்லி நான் குணசேகரன் கிட்ட பார்த்துக்கொள்கிறேன் என கூற கரிகாலன் பயப்படுகிறார்.

பிறகு ஈஸ்வரியின் அப்பா வீட்டு பெண்களிடம் எங்க வீட்டு மருமகள்கள் ஆச்சரியப்படுற மாதிரி ஒரு விஷயம் இருக்கு என்று சொன்னாங்க ஆனால் அது என்னன்னு தெரியவில்லை என்று கூறுகிறார். எனவே மருமகள்கள் அனைவரும் பதட்டத்தில் இருக்க விசாலாட்சி, குணசேகரன் அனைவரும் வருகின்றனர்.