போலீஸ்சார்களை மிரட்டும் கதிர்.! கடைசியில் அள்ளிக்கிட்டு தான் போகணும்.. ஜனனியின் அதிரடி முடிவு

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை யார் கொன்றது என்பது தற்பொழுது வரையிலுக் தெரியாமல் இருந்து வருவதனால் இதனை குணசேகரன் தான் செய்திருப்பார் என்ற சந்தேகம் சக்தி, ஜனனி இருவருக்கும் இருந்து வருகிறது. எனவே தற்போது அப்பத்தாவின் கேசை ஆரம்பித்திருக்கும் நிலையில் இதற்கு சாருபாலா உதவி வருகிறார்.

அதாவது அப்பத்தா தனது 40% சொத்தில் இருந்து தனக்கு முழுவதையும் தராத காரணத்தினால் கோபத்துடன் இருந்த குணசேகரன் தனது தம்பிகளிடம் கூட சொல்லாமல் பலே திட்டம் போட்டு அப்பத்தாவை கொலை செய்துள்ளார். ஆனால் ஒரு புறம் அப்பத்தா உயிருடன் இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவதர்ஷினி -க்கு இவ்வளவு பெரிய மகளா.? மாடர்ன் டிரஸ்ஸில் கவர்ச்சி காட்டும் நியத்தி கடம்பி

மேலும் இந்த சூழலில் வியாபாரத்தில் எஸ்.கே.ஆர் மற்றும் குணசேகரனுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அப்படி விரைவில் நடைபெற இருக்கும் எலக்ஷனில் எஸ்.கே.ஆர் தனது மனைவி சாருபாலாவை நிற்க வைக்கிறார். சாருபாலாவிற்கு எதிராக குணசேகரன் தனது மனைவி ஈஸ்வரியை நிற்க வைத்துள்ளார்.

எனவே இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற நோக்கத்துடன் தற்பொழுது கதைகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஜனனி சாருபாலாவை சந்திக்க சாருபாலா ஜனனியிடம் அப்பத்தாவின் விஷயத்தில் நான் ஆஜராவது குணசேகரனுக்கு தெரியுமா என்று கேட்கிறார்.

போதையில் அசிங்கமாக பேசி அந்த இடத்தில் கை வைத்து கசக்கினார் – குணச்சித்தர நடிகர் குறித்து நடிகை சோனா

இதற்கு ஜனனி எப்பொழுது தெரிய வருதோ அப்ப பாத்துக்கலாம் என்று சொல்கிறார். இதனை அடுத்து போலீஸார்கள் வந்து கொண்டிருக்க அனைவரும் முன்பும் இதுக்கும் குணசேகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை குற்றவாளி வேற ஒருத்தருனு உறுதி ஆயிடுச்சினா உங்க மகன் எங்க வழியில தலையிடக்கூடாது என்று விசாலாட்சி இடம் சொல்கிறார்.

இதனை அடுத்து போலீஸார்கள் குணசேகரனிடம் இந்த விஷயம் எஸ்.பி.ஐ வரை போயிடுச்சி என்று சொல்ல அதற்கு கதிர் வரலாம் முடியாது என கூறுகிறார். இதற்கு போலீஸ் வரவில்லை என்றால் ஃபோர்ஸை கூப்பிட்டு வந்து அள்ளிக்கிட்டு போற மாதிரி இருக்கும் என மிரட்டுகிறார்.