காதலிக்கு எதிராக பொண்டாட்டியை தூண்டிவிடும் குணசேகரன்.! கடைசி வரை சவால் மட்டுமே விட போகும் ஜனனி..

Ethirneechal serial today promo 1: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் இனிமேல் தான் சரியான சம்பவம் உள்ளது. அதாவது குணசேகரன் ஈஸ்வரி வேலை பார்க்கும் கல்லூரிக்கு சென்று அனைவர் முன்பும் அவமானப்படுத்தினார்.

எனவே வேறு வழியில்லாமல் ஈஸ்வரி இதற்கு மேல் இந்த கல்லூரியில் வேலை பார்க்க முடியாது என வேலையை விட்டு நின்று விட்டார். இந்த சம்பவத்தால் கடுப்பான ஜனனி வழக்கம் போல குணசேகரனிடம் மிஸ்டர் குணசேகரன் நீங்க செஞ்ச காரியத்தால் இந்த வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுவோம் என்று மட்டும் நினைக்காதீங்க இனிமேல்தான் நாங்கள் வேகமா செயல்படுவோம் என்று கூறுகிறார்.

ரத்த மழையில் ரிஷப் ஷெட்டி.. வெளியானது காந்தாரா தி லெஜண்ட் படத்தின் டீசர்

சமீப காலங்களாக தொடர்ந்து டயலாக் மட்டும் பேசி வந்தாலும் ஒன்னும் செயலில் கிடையாது சும்மா வாய் சகடால் மட்டும் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜனனி.  என்னதான் மருமகள்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என நினைத்தாலும் குணசேகரனை மீறி பெரிதா இவர்களால் உண்ணும் செய்ய முடியாது என்பது மட்டும் தெரிய வருகிறது.

இவ்வாறு சம்பந்தம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருவதனால் மக்கள் செம கடுப்பில் உள்ளனர். இதனை அடுத்து குணசேகரன் வியாபார ரீதியாக எஸ்கேஆரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என பல வேலைகளை செய்து வருகிறார். மேலும் எஸ்கேஆர் அப்பத்தாவை கொன்னது ஜீவானந்தம் கிடையாது எனவும் குணசேகரனுக்கு ட்விஸ்ட் வைத்துள்ளார்.

கரகாட்டக்காரன் பட நடிகை கனகாவா இது? முன்னணி நடிகையாக இருந்தும் தற்பொழுது இவருடைய பரிதாப நிலை இதுதான்..

இந்நிலையில் வியாபார எலக்ஷனில் எஸ்கேஆர்க்கு பதிலாக அவரது மனைவி சாருபாலா நிற்க வைக்க முடிவு செய்துள்ளாரா. இது குறித்து குணசேகரனுக்கு தெரிய வர தனது முன்னாள் காதலி சாருபாலாவிற்கு எதிராக தனது மனைவி ஈஸ்வரியை நிற்கவைக்க முடிவெடுத்துள்ளார் குணசேகரன்.