அப்பத்தாவின் விஷயத்தில் மாட்டிக்கிட்டு முழிக்கும் குணசேகரன்.. அதிரடி காட்டும் ஜனனி.! அசிங்கப்படுத்திய ஈஸ்வரி

Ethirneechal serial today promo: எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது அப்பத்தாவின் இறப்பை வைத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்காகவும் ஜீவானந்தத்தை வெளியில் எடுப்பதற்காகவும் ஜனனி, சக்தி முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜனனி ஜீவானந்தத்தை சந்தித்த நிலையில் அப்பத்தாவின் கனவை நிறைவேற்றுவதற்கான வேலையை பாருங்க அப்பத்தா எப்படி இறந்தாங்கன்னு யோசிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்பத்தா இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவர் உயிருடன் தான் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குணசேகரன் அப்பத்தா இறந்தது போலவே அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

5 சூப்பர் ஹிட் படங்களை நழுவ விட்ட அஜித், விக்ரம்.. வந்ததை இறுக்கமாக பிடித்து வளர்ந்த வாரிசு நடிகர்

குணசேகரன் திட்டம் போட்டு அப்பத்தாவை ஏதோ செய்திருக்கும் நிலையில் ஆனால் இங்கு அனைவருக்கும் இந்த உண்மைகள் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார். மறுபுறம் இதற்கு மேல் குணசேகரனின் காசில் வாழக்கூடாது என்பதற்காக ஈஸ்வரி வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஆனால் இது சுத்தமாக குணசேகரனுக்கு பிடிக்கவில்லை. மறுபுறம் ஜீவானந்தத்தின் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபித்து காமிக்க வேண்டும் என்பதற்காகவும், அப்பத்தாவின் இறப்பில் இருக்கும் உண்மையை தெரிந்து கொள்வதற்காகவும் ஜனனி, சக்தி எஸ்க ஆர் மனைவியிடம் உதவி கேட்டுள்ளார்கள்.

மாமனிதன் படத்தில் அஜித் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. சொன்னது யார் தெரியுமா.?

இதனை அடுத்து இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் கொடுத்த ஸ்டேட்மென்ட் விசாரிச்ச மாதிரியே தெரியலையே அவர் சொன்னது அப்படியே எழுதுன மாதிரி தானே இருக்கு என்று வக்கில் போலீஸிடம் கேட்க அதற்கு ஜனனி ஆமா மேம் என்று கூறுகிறார்.

மறுபுறம் குணசேகரன் ஈஸ்வரியிடம் வேலைக்கு போய் தான் தீருவ அப்படித்தானே என கேட்க அதற்கு ஆமாங்க நான் வேலைக்கு போவது தான் உறுதி என்று சொல்லி விடுகிறார். பிறகு வக்கீல் ஒருவர் குணசேகரனுக்கு போன் பண்ணி சக்தியும் ஜனனியும் அப்பத்தாவின் கேசை மறுசலமைப்பு பண்ண சொல்லி கேஸ் போட்டு இருப்பதாக தெரிவிக்க குணசேகரன் பதட்டம் அடைகிறார்.