இறந்து போன அப்பத்தா… ஜெயிலுக்கு போகும் ஜீவானந்தம்.. மாமியாரையே மிரட்டும் ஈஸ்வரி.. பரபரப்பான எதிர்நீச்சல்

Ethirneechal serial today promo: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இறந்துவிட்டாரா இல்லை குணசேகரன் உயிருடன் கடத்தி வைத்திருக்கிறாரா என்பது தெரியாத புதிராக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது.

அப்பத்தா மருமகள்களுடன் சேர்ந்து கொண்டு தனது மொத்த சொத்தையும் தரவில்லை என்பதற்காக குணசேகரன் கடும் கோபத்தில் இருந்து வந்தார். மேலும் ரௌடி கிளியை வைத்து அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட முடிவு செய்திருந்தார்.

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் பீச்சில் நிர்வாணமாக ஓடுவேன்.. பிரபல நடிகை போட்ட அதிரடி பதிவு..

அப்பத்தா, ஜீவானந்தம் இருவரையும் கொல்ல ஆள் வைத்திருப்பது கௌதமுக்கு தெரிய வர நடைபெற்ற பங்ஷனில் கொலை செய்ய வந்த நபரை சுட்டுக் கொன்று விடுகிறார். இதனால் அனைவரும் பதட்டத்தில் இருக்கின்றனர் இதனை பயன்படுத்திக்கொண்ட குணசேகரன் அப்பத்தாவிற்கு பாலில் மருந்தை கலந்து கொடுக்க ஒரு கட்டத்தில் அப்பத்தா மயங்கி விழுகிறார்.

எனவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக சென்று விட்டு பிறகு அப்பத்தா இறந்து விட்டதாக கதிர், ஞானம், கரிகாலன் கூறுகின்றனர். இதில் குணசேகரன் எங்கு போய் உள்ளார் என்பதே தெரியவில்லை. சக்தி, ஜனனி இருவரும் அப்பத்தா இருந்த இடத்திற்கு சென்று பார்க்க அங்கு அவருடைய புடவை இருக்கிறது.

எவ்வளவுதான் சர்ச்சை இருந்தாலும் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்த சிவ கார்த்திகேயன்.! சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா.?

இதனை வைத்து இருவரும் கதறி அழுக ஒருபுறம் ஈஸ்வரி ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக சென்றார். அங்கு ஜீவானந்தம் குணசேகரன் செய்த தப்புக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறி விடுகிறார். இதனை அடுத்து தற்போது வெளியாக இருக்கும் இன்றைய ப்ரோமோவில் சக்தி ஜனனி வீட்டிற்கு வர நந்தினியின் கையில் அப்பத்தாவின் புடவையை கொடுத்து இவங்க எல்லாம் சேர்ந்து அப்பத்தாவை கொன்னுட்டாங்க அக்கா எனக்கூறி அழுகிறார்.

கரிகாலன் விசாலாட்சியிடம் ஜஸ்ட் மிஸ் அத்த எல்லாரும் பீஸ் பீஸா ஆயிருப்போம் என்று சொல்ல சக்தி அப்படிதான்டா ஊரை ஏமாத்தி வச்சிருக்கீங்க இதை எங்களையும் நம்ப சொல்றீங்களா என கேட்கிறார். பிறகு ஈஸ்வரி ஜீவானந்தத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு என்று சொல்ல இதற்கு விசாலாட்சி இன்னும் அவனுக்காக வக்காலத்து வாங்கிகிட்டு இருக்கீங்க அப்படி என்னாடி வசியம் பண்ணிட்டா அவன் என்று சொல்ல இதனால் கடுப்பான ஈஸ்வரி போதும் அத்த நிறுத்துங்க என கூறுகிறார்.