எவ்வளவுதான் சர்ச்சை இருந்தாலும் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்த சிவ கார்த்திகேயன்.! சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா.?

Sivakarthikeyan net worth : நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் அதன் பிறகு படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் இவரை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான் மூணு திரைப்படத்தில் தனக்கு தோழனாக நடிக்க வைத்தார். அதேபோல் வளரும் இளைஞர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

ஏனென்றால் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனக்கு கிடைத்த மேடைகளில் ஏறி மிமிகளை செய்து அப்படியே தொலைக்காட்சி வாய்ப்பை பெற்று தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் சினிமா நிகழ்ச்சி விருது வாங்கும் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

டெல்லி மும்பையில் இருந்து ஒரு நடிகர் வருவார் அன்றுதான் அஜித்திற்கும் விஜய்க்கும் ஏழரை..? வயித்தெரிச்சலில் பகிர் கிளப்பிய பிரபல நடிகர்…

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது அயலான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இமான் சொன்னதிலிருந்து சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் மீது பல பிரபலங்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள் ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருந்தார்கள். அதேபோல் இமானின் முன்னாள் மனைவியும் சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருந்தார். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.

ப்ளே பேக் சிங்கர் சின்மயின் இரு குழந்தைகளை பார்த்துயுள்ளீர்களா.? இதோ அசர வைக்கும் புகைப்படம்

சினிமாவிற்கு வந்து 11 ஆண்டு ஆகிய நிலையில் சிவகார்த்திகேயன் கோடி கோடியாய் சம்பாதித்து தன்னுடைய சொத்து மதிப்பை 110 கோடி வரை சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியில் ஆடம்பர பங்களா ஒன்று இருப்பதாகவும் தன்னுடைய பூர்வீக கிராமத்திலும் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்று இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.