அப்பத்தாவின் புடவை பார்த்து கதறி அழும் ஜனனி.. குணசேகரின் கொட்டத்தை அடக்க பெண்கள் எடுக்கும் அதிரடி முடிவு…

Ethirneechal serial today promo: பல எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அப்பத்தா இறந்து விட்டாரா இல்லை குணசேகரன் திட்டம் போட்டு யாருக்கும் தெரியாமல் கடத்தி வைத்திருக்கிறாரா என்பது தெரியாத புதிராகவே இருந்து வருகிறது.

அதாவது அப்பத்தா தனது 40% சொத்தை மொத்தமாக குணசேகரனிடம் தராத காரணத்தினால் கடுப்பான குணசேகரன் அப்பத்தாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அப்படி அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வர அப்பத்தாவிற்கு குணசேகரன் மருந்து கலந்து பாலை தருகிறார்.

அப்பத்தா தனது பேரன் பாசத்துடன் தான் தருகிறான் என நினைத்து பாலை குடித்து விட கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுகிறார். உடனே குணசேகரன் திட்டம் போட்டு சக்தி, ஞானம், கரிகாலன் ஆகியோர்களுடன் அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

கேப்டனா ஒன்னும் கிழிக்கல.. டாஸ்க்கிலும் தினேஷை டார்கெட் செய்யும் பூர்ணிமா.! BB 7 டைட்டில் வின்னர் விக்ரமா?

போற வழியில் துப்பாக்கியால் சுடுவதாக கூற அனைவரும் காரை விட்டு இறங்குகின்றனர் காரில் இருந்த அப்பத்தா காணாமல் போக அப்பத்தா இறந்து விட்டதாக கூறி ஞானம், கதிர், கரிகாலன் வீட்டில் இருப்பவர்களிடம் கூறுகின்றனர். எனவே இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் உடைந்து விடுகிறது.

ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜனனி, சக்தி சென்று அப்பத்தா இறந்த இடத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். அங்கு அப்பத்தாவின் உடல் எரிந்து கொண்டிருக்கிறது அவருடைய புடவையை பார்த்ததும் கதறி அழுகிறார் ஜனனி. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விசாலாட்சி ரேணுகாவிடம் அந்த அம்மா எங்க என கேட்க போயிடுச்சா உங்க பிள்ளைங்க எல்லாம் மொத்தமா கொண்டுட்டு போயி சேர்த்துட்டாங்க எனக் கூறுகிறார்.

அஜித்தையே கெஞ்ச விட்ட தயாரிப்பாளர்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்.!

மறுபுறம் ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் குணசேகரன் செய்த தப்பை வெளியில் கொண்டுட்டு வர நம்ம கிட்ட எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறார். பிறகு ஜனனி அப்பத்தாவின் உடல் எரிந்து கொண்டிருக்கும் இடத்தில் அவருடைய புடவையை எடுத்து வைத்துக்கொண்டு குணசேகரனை சும்மாவே விடமாட்டேன் அப்பத்தா என கோபத்துடன் கூறுகிறார்.