சொத்துக்காக அப்பத்தாவை எரிய விட்டுவிட்டாரா குணசேகரன்.? கதறி அழும் ஜனனி

Ethirneechal serial today promo: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 40% சொத்துக்காக குணசேகரன் அப்பத்தாவை திட்டம் போட்டு கொன்று விட்டாரா? உண்மையாகவே அப்பத்தா இறந்து விட்டாரா? என்ற அதிர்ச்சியான சம்பவங்களுடன் எதிர்நீச்சல் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது அப்பத்தா தங்களுக்கு அனைத்து சொத்துக்களையும் தரவில்லை என்ற கோபத்தில் குணசேகரன் தீர்த்து கட்ட முடிவு செய்தார். மேலும் அப்பத்தாவிற்கு பாலில் மருந்து ஏதோ கலந்து கொடுத்து மயக்கம் போட வைத்தார் ஒரு கட்டத்தில் கதிர், ஞானம், குணசேகரன் மற்றும் கரிகாலன் ஆகியோர்கள் இணைந்து அப்பத்தாவை மருத்துவமனை அழைத்து செல்கின்றனர்.

தினேஷ்க்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்.. பொங்கி எழும் அமுல் பேபி.! மாயாவின் முகத்திரை கிழிந்தது

இவர்கள் பின்னாடியே சக்தி அனைத்து மருமகள்களை காரில் அழைத்துச் செல்ல ஆனால் அப்பத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இடையில் யாரோ துப்பாக்கியால் சுட அப்பத்தா  இறந்து விட்டதாக கதிர், ஞானம் வீட்டிற்கு வந்து கதறி அழுகின்றனர்.

ஆனால் இதில் ஜனனி சக்திக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை இதனை அடுத்த தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற சக்தி, ஜனனி அந்த இடம் எங்க இருக்குன்னு சொல்லுங்க சார் நாங்க அங்க போய் பாக்கணும் என கேட்கின்றனர்.

நல்ல கதை, மோசமான கதை சொல்றவனுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான்.. லோகேஷ் – விஜயை மறைமுகமாக தாக்கினாரா கோபி நயினார்

அப்பத்தா ஒரு பக்கம் அந்த புள்ள ஒரு பக்கம் எங்கக்கா போனாரு அவரு என நந்தினி ரேணுகாவிடம் கதறி அழுகிறார். இதனை அடுத்து ஜீவானந்தத்திடம் வேலை செய்யும் பெண் ஈஸ்வரியை பார்த்து போன் ஒன்றை தருகிறார். அதில் ஈஸ்வரியிடம் ஜீவானந்தம் இந்த நம்பருக்கு லொக்கேஷன் அனுப்புறேன் வந்துடுங்க என கூறுகிறார். மேலும் அப்பத்தா இறந்த இடத்திற்கு ஜனனி, சக்தி சென்றுள்ளனர்.