அப்பத்தாவை கடத்திய குணசேகரன்.! உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கும் ஜீவானந்தம்.. பதட்டத்தில் மருமகள்கள்

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் தான் போட்ட திட்டத்தை தற்போது நிறைவேற்றியுள்ளார். அதாவது அப்பத்தா தனது 40% சொத்தை யாருக்கு தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் எதிர்நீச்சல் சீரியலின் கதைகளும் நகர்ந்து கொண்டிருந்தது.

தற்போது அனைவருக்கும் தெரிய வந்திருக்கும் நிலையில் இதனால் குணசேகரன், கதிர், ஞானம் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். அதாவது அப்பத்தா நடந்து முடிந்த பங்க்ஷனில் தனது 40% சொத்தை பெண்களின் வளர்ச்சிக்காக கொடுத்துள்ளார். எனவே இதனால் கடுப்பான குணசேகரன் பிளான் பண்ணி வீட்டிற்கு வந்தவுடன் மருமகள்கள் யாரும் இல்லாத நேரத்தில் பாலில் மருந்து கலந்து கொடுத்து அப்பத்தாவை குடிக்குமாறு கூறுகிறார்.

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. சிக்குமா சூனியக்காரி டீம்

அப்பத்தாவும் குணசேகரனை நம்பி அந்தப் பாலை குடித்து விட பிறகு மயக்கம் போட்டு விழுகிறார். இந்த நேரத்தில் இதனை பயன்படுத்திக் கொண்டு குணசேகரன் இப்படி அப்பத்தா ஆவதற்கு நீங்கள்தான் காரணம் என மருமகளிடம் கூறிவிட்டு ஞானம், கதிர், குணசேகரன் மூன்று பேரும் அப்பத்தாவை காரில் அழைத்து செல்கின்றனர்.

பின்னாடியே சக்தி மருமகள்கள் அனைவரும் செல்ல இவர்கள் அப்பத்தாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யாதது தெரிய வருகிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனி எங்கேயும் அட்மிட் பண்ணலையா இவங்க ஏதோ கேம் ஆடுறாங்க என சொல்ல இதற்கு ஈஸ்வரி சக்தியை உங்க அண்ணனுக்கு போன் பண்ணுமாறு கூறுகிறார்.

தாவணி பாவாடையில் லட்டு, ஜாங்கிரி என தீபாவளியை கொண்டாடிய அனிகா சுரேந்திரன்.! அடுத்த நயன்தாரா நீங்கதான் அடிச்சு சொல்லும் ரசிகர்கள்..

இந்த நேரத்தில் ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் பண்ணி நான் சொல்றத மட்டும் சரியா கேட்டுக்கங்க அப்பத்தோட உயிருக்கு பெரிய ஆபத்து இருக்கு என சொல்ல மருமகள்கள் அதிர்ச்சி அடைகின்றனர். சக்தி ஞானத்துக்கு போன் பண்ணி எங்க இருக்கீங்க என கேட்க வீட்டுக்கு வருமாறு ஞானம் சொல்கிறார். வீட்டுக்கு வரணுமா என்ன கேட்க சக்தி பேசுவதற்குள் ஞானம் போனை வைத்து விடுகிறார்.