அருணுக்கு ஆக்சிடென்ட்டான அனைத்து உண்மைகளையும் வெளியில் கொண்டு வருவேன் கதிரிடம் சவால் விட்ட ஆதிரை.. ஜனனியிடம் மல்லு கட்டும் விசாலாட்சி..

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தொடர்ந்து குணசேகரனுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது ஒருபுறம் குணசேகரனுக்கு எதிராக எலக்ஷனில் ஈஸ்வரி போட்டி போடுகிறார்.

எனவே இதற்கான வேலையில் இருக்கும் நிலையில் மறுபுறம் ஆதிரை எஸ்கேஆர் வீட்டில் தங்கி வருகிறார். குணசேகரனின் பரம எதிரியான எஸ்.கே.ஆர் வீட்டில் தனது தக்கை தங்கி வருவதால் கதிர், ஞானம் என அனைவரும் கோவத்தில் உள்ளனர். இந்த சூழலில் ஜனனியின் ஃபேக்டரிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பெருசா கனவு காணும் மீனா, முத்து.. அதிகாலையில் விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பூஜை போட்டு திறக்காமல் வைத்திருந்த ஜனனியின் ஃபேக்ட்ரியை அவருடைய சொந்தக்காரர்களே பிடுங்கி உள்ளனர். இந்த சூழலில் தனது அம்மா, அண்ணன் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஜனனியின் அம்மாவை பிரிந்து தனது அம்மாவுடன் சென்றுள்ளார் ஜனனியின் அப்பா.

எனவே தனியாக இருக்கும் ஜனனியின் அம்மாவை சக்தி தனது வீட்டிற்கு அழைத்து செல்ல அங்கு விசாலாட்சி பல பிரச்சனைகளை செய்தாலும் அதனை எல்லாம் எதிர்த்து சத்தி நின்றார். எனவே ஜனனி சக்தியின் உண்மையான காதலை புரிந்துக் கொண்டு ஏற்றுக் கொண்டுள்ளார்.

தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஆதிரை, சாரு பாலா போலீஸ்வுடன் குணசேகரன் வீட்டிற்கு வர அங்க அருண் ஆக்சிடென்ட்டில் இருந்து அப்பத்தா ஆக்சிடென்ட் வரைக்கும் எல்லா கேசும் வெளியில வரப்போகுது எனக் கூற அதற்கு கதிர் என்ன சவாலா விடுற என கத்துகிறார்.

2023 – ல் வெற்றி, தோல்வியை தாண்டி அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 8 நடிகர்கள்! அதிர்ச்சி கொடுத்த இளம் ஹீரோ

பிறகு நடு ரோட்டில் தர்ஷினியை மரித்து ஜான்சி ராணி பேசிக்கொண்டு இருந்தா வேலைக்காவது என்ன எவன் சொல்கிறான் என மிரட்ட இந்த நேரத்தில் தர்ஷன் வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என தர்ஷினியை அழைத்துச் செல்கிறார். இதனை அடுத்து விசாலாட்சி ஜனனி அம்மாவிடம் எல்லா பிரச்சனைக்கும் உன் பொண்ணு தான் காரணம் என சொல்ல அதற்கு சக்தி இவ தான் எல்லாத்தையும் பண்ணுன மாதிரி பேசிக்கிட்டு இருக்க அவ இங்க வரணும்னு ஒத்த கால்ல நின்னுது உன்னுடைய மகன் தான் எனக் கூற விசாலாட்சி தலையை குனிந்து கொள்கிறார்.