பெருசா கனவு காணும் மீனா, முத்து.. அதிகாலையில் விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode January 5 : இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரவியிடம் உங்க அண்ணன் முத்து என்னை இன்சல்ட் பண்றதுக்காகவே 2,500 பணம் கொடுத்து இருக்காரு என்று சொல்ல, ரவி நீ ஏன் அப்படி நினைக்கிற மீனா அண்ணிக்கி நீ பணம் கொடுத்தது எனக்கே பிடிக்கல அதனால அவரு அப்படி பண்ணி இருக்கலாம்..

உன்னால மீனா அண்ணிக்கி நல்லது தான் நடந்திருக்கு என்று ரவி சொல்கிறார். அப்பொழுது விஜயா அங்கு வந்து எனக்கும் அப்படி தான் தோணுச்சு, வீட்டு வாசல்ல பூக்கடை போட்டு இருக்கான், நாளைக்கு மலேசியா சம்மந்தி வீட்டுக்கு வந்தாங்கன்னா ஸ்ருதியோட அம்மா வீட்டுக்கு வந்தாங்கன்னா என்ன நினைப்பாங்க என்று சொல்கிறார்.

2023 – ல் வெற்றி, தோல்வியை தாண்டி அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 8 நடிகர்கள்! அதிர்ச்சி கொடுத்த இளம் ஹீரோ

அடுத்து முத்து மீனா இந்திரா சீதா எல்லோருக்கும் டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க என்று சொல்கிறார்.. பிறகு இரவு மீனா மற்றும் முத்து பூ கடையில் வந்த வரவு செலவு கணக்கு பார்க்கின்றனர்.. அப்பொழுது மீனா 150 ரூபாய் பணம் குறையுது என்று சொல்ல ஆமாம் நான் தான் வண்டிக்கு பணம் கொடுத்தப்ப சில்லறை இல்ல அப்புறம் தரேன்னு சொன்னாரு என்று முத்து சொல்கிறார்.

பிறகு கணக்கு எல்லாம் பார்த்து முடித்துவிட்டு இன்னைக்கு 600 ரூபாய் லாபம் வந்தது என்று மீனா சொல்லி சந்தோஷப்படுகிறார். இந்த 600 ரூபாய் வச்சு என்ன பண்ணலாம் என்று இரண்டு பேரும் பிளான் போட்டுக் கொண்டிருக்கும் அப்பொழுது அண்ணாமலையும் விஜயாவும் அங்கு வருகின்றனர். அப்போது விஜயா வந்த லாபத்துல ஒரு தாஜ்மஹால் கட்டி வாடகைக்கு விடு பெரிய 600 கோடி சம்பளம் வந்த மாதிரி ரெண்டு பேரும் சீன் போடுறீங்க என்று சொல்கிறார்.

சொகுசு வாழ்க்கைக்காக திருமணம் ஆனவர் என்று கூட பார்க்காமல் தயாரிப்பாளரையே வளைத்துப் போட்ட ஒல்லி பெல்லி நடிகை..

அப்பொழுது முத்து சொந்தமா தொழில் ஆரம்பிச்சு வந்த சம்பளம் அது எவ்வளவா இருந்தாலும் எங்களுக்கு சந்தோசம் தான் என்று சொல்கிறார்.. பிறகு காலையில 3:30 மணிக்கு கோயம்பேடு போய் பூ வாங்கணும் சீக்கிரம் போய் தூங்கலாம் என்று போகின்றனர். ரூமுக்கு போன பிறகும் மீனா பூ கட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முத்து என்ன இந்த நேரத்தில் பூ கட்டிட்டு இருக்க என்று கேட்க நாளைக்கு ஒரு ஆர்டர் கொடுத்திருக்காங்க, நீங்க தூங்குங்க நான் கட்டி முடிச்சுட்டு வரேன் என்று சொல்கிறார். பிறகு அடுத்த நாள் விடியற்காலையில் ரெண்டு பேரும் எழுந்து கோயம்பேடுக்கு போய் பூ வாங்கிக்கொண்டு ஒரு கடையில் டீ குடிக்கின்றனர்..

பிறகு இங்கே டிபன் சாப்பிட்டு பொறுமையா போகலாம் என்று முத்து சொல்ல ரெண்டு பேரும் சாப்பிடுகின்றனர். பிறகு மீனா வீட்டுக்கு போய் சீக்கிரம் டிபன் ரெடி பண்ணனும் அவங்க எல்லாம் வேலைக்கு போறவங்க என்று சொல்ல முத்து அதெல்லாம் அவங்களே ஏதாவது செஞ்சுகிட்டும் என்று சொல்கிறார் உடனே மீனா அப்பனா நம்ம டிபன் சாப்பிட்டுட்டு அவங்க எல்லாருக்கும் வாங்கிட்டு போயிடலாமா என்று கேட்க முதல்ல சாப்பிடு அப்புறம் பேசிக்கலாம் என்று முத்து சொல்கிறார்.

இன்னொரு பக்கம் விஜயா வீட்டில் மீனா ஒரு காபி போட இவ்வளவு நேரமா காபிக்காக கத்திக்கிட்டு இருக்கனே என்று கேட்க, அண்ணாமலை அவங்க தான் வீட்ல இல்லையே காலையில எழுந்து பூ வாங்க கோயம்பேடு போய்ட்டாங்களே உனக்கு காபி வேணும்னா நீ தான் போட்டு குடிக்கணும் என்று கேட்க என்னது நான் காபி போட்டு குடிக்கணுமா என்று விஜயா ஷாக் ஆகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.