ஜனனி அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்த சக்தி.. வெளியே போக சொன்ன விசாலாட்சி.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது ஜனனியின் ஃபேக்டரிக்கு பிரச்சனை வந்துள்ளது. குணசேகரன் ஈஸ்வரி இருவரும் எலக்ஷனில் பிஸியாக இருக்க மறுபுறம் ஜனனியின் சொந்தக்காரர்களே அவருக்கு எதிரியாக உள்ளனர்.

ஏற்கனவே குணசேகரனை பார்ப்பது போல் வந்து ஜனனி எதிரி எச்சரித்துவிட்டு சென்றார். எனவே இதனால் ஜனனி, சக்தி இருவரும் அட்விக்கேட்டை சந்திக்க அவர் முதலில் ஃபேக்ட்ரியில் பூஜை போடுமாறு கூறியிருந்தார். இதன் காரணமாக அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜனனியின் ஃபேக்டரியில் எச்சரித்த எதிரியின் குடும்பத்தினர்கள் பூஜை போட்டனர்.

கையில் துப்பாக்கி தெறிக்க வெளியானது தளபதி 68 செகண்ட் லுக் போஸ்டர்..

எங்களுடைய ஃபேக்டரியில் நீங்க எப்படி பூஜை போடலாம் நீங்க யாரு என பேசிக்கொண்டு இருக்க இந்த நேரத்தில் தான் அவர்கள் அனைவரும் ஜனனி அப்பாவின் கூட பொறந்தவர்கள் என தெரிய வந்தது. அதாவது ஜனனியின் அப்பா வசதியான குடும்பத்தில் பிறந்துள்ளார் இந்த நேரத்தில் ஜனனியின் அம்மாவை காதலித்து ஓடியதால் அவருடைய குடும்பத்தினர் இவரை ஒதுக்க வைத்துள்ளனர்.

எனவே இதனால் தற்பொழுது அவன் போக்கன கரையாவனே அழிச்சிட்டா அவனை ஏத்துப்பீங்களா என கேட்டு ஆத்தா அழுவ பிறகு ஜனனியின் அப்பாவும் ஜனனியின் அம்மாவை விட்டுவிட்டு வந்து விட்டார். இதனால் ஜனனியின் அம்மா எவ்வளவு அழுதும் அவர் கேட்கவில்லை. இவ்வாறு தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஜனனியின் அம்மா ஜனனிக்கு இங்க இருக்கிற கஷ்டமே போதும் நான் வரவில்லை எனக் கூறி ரோட்டில் நிற்க இந்த நேரத்தில் சக்தி ஜனனிக்கு எந்த கஷ்டமும் இல்லை இந்த நிலைமையில் அத்தையை தனியாக விடுவது சரியா வராது என கூறிவிட்டு வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்.

வருங்கால மருமகனுடன் நியூ இயர் கொண்டாடிய கமலஹாசன்..? தம்பி அப்பா முன்னாடியே பொண்ணு மேல கைய போடுறியே..

பிறகு கரிகாலன், ஜான்சிராணி இருவரும் விசாலாட்சியிடம் நடந்த அனைத்தையும் கூற பிறகு கரிகாலன் விசாலாட்சி இடம் நடந்த எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்க பிறகு புரியாத மாதிரி என்னன்னு கேட்கிறீங்க என கூறுகிறார். இதனை அடுத்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்க விசாலாட்சி முதல்ல இந்த பொம்பளைய வெளியில போக சொல்லுங்க என சொல்ல உடனே சக்தி நானும் ஒரே அடியா இந்த வீட்டை விட்டு போயிடுறேன் பரவாயில்லையா என சொன்னவுடன் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.