வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ஜனனி.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்ட குணசேகரன்.. எதிர்நீச்சல் பரபரப்பான ப்ரோமோ

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதாவது தற்பொழுது நடைபெறும் எலக்ஷனில் எஸ்.கே.ஆர் தனது மனைவி சாருபாலாவை நிறுத்த வைக்கிறார்.

இவருக்கு எதிராக குணசேகரன் ஈஸ்வரியை நிற்க வைக்கிறார். எனவே இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் தான் ஜெயித்து விட்டால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என ஈஸ்வரி கூறியுள்ளார். ஆனால் குணசேகரன் இதற்கு எதிராக இருந்து வரும் நிலையில் எனக்கு எதிராக ஈஸ்வரி பேசியதனால் கோபமடைந்த குணசேகரன் ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினார்.

அஜித் ஓகே சொல்லட்டும்.. முதலமைச்சர் நாற்காலி ரெடி.. கொளுத்தி போட்ட பிரபல இயக்குனர்

எனவே இதனால் குடும்பத்தினருக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. எலக்ஷனில் ஈஸ்வரி ஜெயித்தால் குணசேகரனின் பேச்சைக் கேட்காமல் தன்னுடைய இஷ்டத்திற்கு முடிவு எடுக்கலாம் என்ற முடிவில் உள்ளார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதனையடுத்து தற்பொழுது ஜனனி அனைவரும் முன்பும் ஓவராக பேச குணசேகரன் ஜனனியை அசிங்கப்படுத்துகிறார்.

அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில்  குணசேகரன் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருக்க அங்கு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவர் சார் உங்ககிட்ட குக் கேட்டிருந்தேனே அதுக்கு ரெடி பண்ணியாச்சு என நந்தினி கூப்பிடுகிறார்.

சினிமாவில் என்னை தூக்கிவிட்ட விஜயகாந்தை ஒருபோதும் மறக்கவே மாட்டேன் – எமோஷனலாக பேசிய முரட்டு நடிகர்.! கொண்டாடும் ரசிகர்கள்

பிறகு நந்தினி வர இந்த நேரத்தில் ஜனனி உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கிறது பிசினஸ் பிரச்சனை அதை இங்க வச்சு பேச வேண்டிய அவசியமில்லை முதல்ல கிளம்புங்க என கூறுகிறார். இதனால் கோபமடைந்த குணசேகரன் நீ என்னா வெளியில போக சொல்றது நாலே நாலு துணியை கக்கத்துல கொண்டுட்டு வந்தவ நீ எவ்ளோ பெரிய குடும்பத்துல வெளியில் போனு சொல்ற என அனைவர் முன்பும் ஜனனியை அவமானப்படுத்துகிறார்.