எஸ்.கே.ஆர் பாக்க போனப்ப பின்னாடியே அவளை அனுப்பிவிட்டது நீதானே.. ஈஸ்வரியை பொளந்து கட்டும் குணசேகரன்..

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்து குணசேகரனுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. அப்பத்தாவை கொலை செய்துவிட்டு தனக்கு சொத்து கிடைத்த விட்டது என்ற மகிழ்ச்சியுடன் இருந்த குணசேகரனுக்கு தற்பொழுது பல பிரச்சனைகள் வந்துள்ளது. அதாவது கதிரை ரவுடிகள் பலர் சேர்ந்து தாக்கியதால் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் தனது தம்பியை யார் அடித்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குணசேகரன் பல முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி முதற்கட்டமாக எஸ்.கே.ஆர் வீட்டிற்கு சென்று என் தம்பியை அடித்தது நீங்கதான என கேட்க அப்பனா என் தம்பியை ஆக்சிடென்ட் செய்தது நீதானா என்று எஸ்.கே.ஆர் கேட்க அதிர்ச்சியடைகிறார்.

மகாவை அவங்க அம்மா வீட்டுக்கு போக விடாமல் சதி திட்டம் தீட்டும் சூர்யா.. ஐஸ்வர்யா பார்த்த நார வேலை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

மேலும் இந்த நேரத்தில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டிற்கு வர அருணை காரை வீட்டு ஆக்சிடென்ட் செய்தது என்னுடைய அண்ணன் தான் என உண்மையை உடைக்கிறார். மேலும் இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை என எஸ்.கே.ஆர் சொல்ல சாருபாலா ஆதிரை இங்கதான் இருப்பா என்று கூறுகிறார். இவ்வாறு குணசேகரன், ஞானம் எவ்வளவு கூறியும் ஆதிரை இங்கு தான் இருப்பதாக கூறியதால் அனைவரும் கோபத்தில் உள்ளனர்.

மேலும் கரிகாலன் – ஜான்சி ராணி இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும் என கூற இதற்கு குணசேகரனும் வாக்கு கொடுக்கிறார். இதனை அடுத்து இன்றைய ப்ரோமோவில் கரிகாலன் ஜான்சி ராணியிடம் பேசிக்கொண்டிருக்கும் குணசேகரனிடம் நீங்க இதெல்லாம் வீம்புக்கு செஞ்சுகிட்டு இருக்கீங்க என சொல்ல அதற்கு குணசேகரனை ஆமாண்டி வீம்புக்கு தான் பண்றேன் நானு என்று சொல்கிறார்.

உருகி உருகி காதலித்து விட்டு மின்னல் வேகத்தில் பிரிந்து சென்ற ஜோடிகள்.. அட லிஸ்டில் இத்தனை ஜோடிகளா

பிறகு தனியாக அனைவரும் பேசிக்கொள்ள ஜனனி அவர் நினைக்கிற மாறிலா ஒன்னும் நடத்த முடியாது என தர்ஷினியிடம் சொல்கிறார். அதற்கு தர்ஷினி செய்ய முடியாதுன்னு நாமதான் இப்படி தனியா பேசிக்கிட்டு இருக்கோம் அவர்தான் எப்பவும் ஜெயிக்கிறார் என கூறுகிறார். பிறகு தனியாக ரூமில் குணசேகரன் ஈஸ்வரியிடம் அந்த எஸ்.கே.ஆர் பார்க்க கிளம்புனதும் என் மூஞ்ச உடைக்க என் பின்னாடியே பெட்டியோடு அனுப்பிவிட்டது நீங்கதான என ஆதிரை செய்ததற்கு ஈஸ்வரியை சண்டை போகிறார்.