உருகி உருகி காதலித்து விட்டு மின்னல் வேகத்தில் பிரிந்து சென்ற ஜோடிகள்.. அட லிஸ்டில் இத்தனை ஜோடிகளா

Tamil Actress: திரைவுலகில் ஏராளமான பிரபலங்கள் உருகி உருகி காதலித்து விட்டு மிக விரைவிலேயே பிரிந்து விடுகிறார்கள் அப்படி காதலித்து அலப்பறை செய்துவிட்டு திடீரென பிரிந்த எட்டு பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

சிம்பு – நயன்தாரா: வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கிடையே காதல் மலர ஆனால் சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். காதல் பிரிவிற்கு பிறகு இருவரும் நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள்.

சிம்பு – ஹன்சிகா: பல காதல் தோல்விகளை சந்தித்த சிம்பு நயன்தாராவை தொடர்ந்து வாலு படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கும் பொழுது இருவரும் பார்ட்டி, டேட்டிங் என மிகவும் ஜாலியாக இருந்து வந்தார்கள். இந்த படத்தின் சூட்டிங் முடிவதற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டனர்.

அந்தப் படத்தில் நான் ஹீரோ.. யாருக்கும் தெரியாது.? செந்தில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

ஜெய் – அஞ்சலி: தொடர்ந்து சில திரைப்படங்கள் அடுத்தடுத்து நடிக்கும் போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறிவிட்டது. அதன்படி எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற திரைப்படங்களில் நடிக்கும் பொழுது அஞ்சலி – ஜெய் இருவரும் காதலித்தவர். மேலும் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது ஆனால் இருவரும் பிரிந்து விட்டனர்.

அனிருத் – ஆண்ட்ரியா: தன்னைவிட ஆண்ட்ரியா மூத்தவர் என தெரிந்தும் இசையமைப்பாளர் அனிருத் காதலித்தார். இருவருக்கும் இடையே பல முரண்பாடுகள் இருந்ததால் இவர்களுடைய காதல் தோல்வியில் முடிந்தது.

ஆர்.கே.சுரேஷ் – திவ்யா கணேஷ்: தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் சீரியல் நடிகை திவ்யா கணேஷை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய சில மாதங்கள் இருந்த நிலையில் ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயதார்த்தத்துடன் இவர்களுடைய காதல் முடிவடைந்தது.

திராட்சை ரசம் ஊற்றி மனத் தீயை அணைக்கிறேன்.. நித்தம் நித்தம் குடியால் அழியும் நடிகைகள்.. நடுரோட்டில் தள்ளாடி போலீசில் சிக்கிய நடிகை..

சித்தார்த் – சமந்தா: சித்தார் சமந்தா இருவரும் தெலுங்கில் 2013ஆம் ஆண்டு வெளியான Jabardasth என்ற படத்தில் இருந்து நடிக்கும் பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஒரு சோப்பு விளம்பரத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் ஆனால் ஒரே வருடத்தில் இவர்கள் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கவின் – லாஸ்லியா: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிக் பாஸ் வீட்டில் காதலித்த கவின் – லாஸ்லியா வெளியே வந்ததும் ஒருவரை ஒருவர் தெரியாது போல் நடந்து கொண்டனர். எனவே இவர்கள் குறித்து பல விமர்சனங்கள் இருந்தும் ஆனால் அந்த வீட்டிற்குள் அப்படி ஒரு ஃபீலிங் அவ்வளவுதான் என கூறிவிட்டனர்.

பப்லூ – ஷீத்தல்: முதல் திருமணத்தின் விவாகரத்திற்கு பிறகு தன்னைவிட 23 வயது சிறியவரான ஷீத்தலை காதலித்து வந்தார். இவர்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரேக் அப் செய்து கொண்டனர்.