கதிர் அடிபட்டதற்கு ஜீவானந்தம் மீது பழியை போடும் குணசேகரன்.! நீங்கதான் ஆள் வச்சி அவர் பொண்டாட்டிய கொன்னதா.? அணுகுண்டை வீசும் ஈஸ்வரி

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கதிருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே விசாலாட்சி புலம்பி வரும் நிலையில் இதற்கெல்லாம் காரணம் நந்தினி தான் நந்தினி தான் ஆள் வைத்து அடிச்சி இருப்பா.

இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாத்து இருப்பாயென மிகவும் கேவலமாக பேசி வருகிறார். மேலும் கதிரை பார்ப்பதற்காக தாரா செல்ல கதிர் மூஞ்சை திருப்பிக் கொள்கிறார். எனவே நீ பெத்த புள்ள தானய்யா எதுக்கு மூஞ்ச திருப்பிட்டு போற என நந்தினி கதிரை திட்டி தீர்க்க பிறகு கதிர், ஞானம் தடுத்து நிறுத்துகின்றனர்.

இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT இல் வெளியாகும் திரைப்படங்கள்.!

இவ்வாறு பல பிரச்சனைகளுடன் போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது கதிரை பார்ப்பதற்காக குணசேகரன் வந்துள்ளார். இதற்கு மேல் யார் கதிரை அடித்தது என்பது குறித்து தேட உள்ளனர் அது குறித்த இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் வீட்டிற்கு வர ஜான்சி ராணி இந்த வீட்டுக்குள்ளேயே சகுனி வேலை பார்த்துகிட்டு சுத்திகிட்டு இருக்காங்களே அவர்களுக்கு முதல்ல ஒரு வழிய பண்ணு என கூறுகிறார் இதனால் ஜனனி கடுப்பாகிறார்.

கதிர் அடிபட்டதற்கு ஜீவானந்தம் மீது பழியை போடும் குணசேகரன்.! நீங்கதான் ஆள் வச்சி அவர் பொண்டாட்டிய கொன்னதா.? அணுகுண்டை வீசும் ஈஸ்வரி

மருத்துவமனைக்கு குணசேகரன் வர அங்கு ஒன்னு எஸ்.கே.ஆர் அல்லது ஜீவானந்தம் இவங்கதான் செய்திருக்கணும் என்று அனைவரிடமும் சொல்ல இதற்கு ஈஸ்வரி ஜீவானந்தம் எதற்கு செய்திருக்கணும் என்று கேட்கிறார். நீங்கதான் உங்க தம்பியோட ஆள் அனுப்பி அவரோட பொண்டாட்டிய கொன்னீங்களோ என்று கேட்க குணசேகரன் அதிர்ச்சியடைகிறார்.